சாத்தான்குளம் போலீஸ் தாக்குதலில் தந்தை-மகன் மரண வழக்கு விசாரணை- சி.பி.ஐ. வசம் ஆவணங்கள் ஒப்படைப்பு
சென்னை: சாத்தான்குளம் போலீசாரின் தாக்குதலில் தந்தை, மகன் மரணமடைந்த வழக்கில் இன்று முதல் சிபிஐ விசாரணை தொடங்கி உள்ளது. இதற்காக சிபிஐ அதிகாரிகள் தூத்துக்குடி சென்று சிபிசிஐடி போலீசாரிடம் இருந்து ஆவணங்களைப் பெற்றனர்.
சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நீதிமன்றம் அதிருப்தி
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போது இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்தது.

சிபிசிஐடி விசாரணை
இதனையடுத்து சிபிஐ விசாரிக்கும் வரை தமிழக அரசின் சிபிசிஐடி போலீசார் இடைக்காலமாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கியது முதலே பெரும் பரபரப்புதான். இந்த விசாரணையில் முதலில் அதிரடியாக 5 போலீசார் கைது செய்யப்பட்டனர்.

அடுத்தடுத்து கைதுகள்
பின்னர் மேலும் 5 போலீசாரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த 10 போலீசார் மீதும் கொலை வழக்கு உள்ளிட்ட பிரிவுகள் பாய்ந்திருக்கின்றன. பிரண்ட்ஸ் ஆப் போலீஸை சேர்ந்தவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே சாத்தான்குளம் வழக்கை சிபிஐ விசாரிப்பதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

விசாரணையை தொடங்கிய சிபிஐ
இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் குழு இன்று காலை டெல்லியில் இருந்து சென்னை வருகை தந்தது. சென்னையில் இந்த வழக்கை விசாரிப்பது தொடர்பான நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். சிபிஐ விசாரணையில் மேலும் பலரும் சிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆவணங்கள் ஒப்படைப்பு
சென்னை ஆலோசனையை தொடர்ந்து மதுரைக்கு சென்றுள்ளனர் சிபிஐ அதிகாரிகள். திருச்செந்தூரில் தங்கி சிபிஐ அதிகாரிகள் விசாரணையை நடத்த இருக்கின்றனர். இந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் குழு தூத்துக்குடி சென்றது. தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications