செல்லூர் ராஜுவை காரில் ஏற்றாத எடப்பாடி.. என்ன நடந்தது?.. வெளியான விளக்கம்
மதுரை: மதுரைக்கு கடந்த வாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்திருந்த நிலையில், தன்னுடைய காரில் எடப்பாடி பழனிசாமி செல்லூர் ராஜுவை ஏற்ற மறுத்ததாக சோஷியல் மீடியாக்களில் வெளியான வீடியோ வைரலாகி இருந்தது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்தாரா என்பது குறித்து செல்லூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டிருந்த பொருள்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 30 ஆம் தேதி பார்வையிட்டார். இதற்காக மதுரைக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, தனது காரில் செல்லூர் ராஜுவை ஏற்க மறுத்ததாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது.

சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்த அந்த வீடியோவில், எடப்பாடி பழனிசாமி காரின் முன் பகுதியில் அமர்ந்திருக்கிறார். அப்போது, அங்கிருந்த செல்லூர் ராஜு காரில் ஏறுவதற்குத் தயாரானார். அவர் ஏறுவதைப் பார்த்த எடப்பாடி பழனிசாமி, வேண்டாம் வேண்டாம், வேறு காரில் செல்லுங்கள் என்று கூறுகிறார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜு மீது மிகுந்த அதிருப்பதியில் உள்ளதாகவும், அதனால் தான் தனது காரில் ஏற்ற மறுத்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு தன் மீது அதிருப்தி என்பதில் உண்மை இல்லை என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காகவே வேறு காரில் சென்றதாகவும் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளதாவது: எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கப்பட்டு வந்த Y பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஒய் பிரிவில் இருந்து, Z பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு பாதுகாப்பு அதிகரித்துள்ளதான் காரணமாக, எடப்பாடி பழனிசாமி இருந்த காரில் பாதுகாப்பு அதிகாரிகள் இருந்தனர்.
அதனால் தான், தன்னை காரில் ஏற வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். வேறு காரில் வருமாறும் கூறினார். பாதுகாப்பு காரணங்களுக்காகவே வேறு காரில் சென்றேன் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications