சதுரங்க வேட்டை..நாய், பூனைக்கு எல்லாம் வரியா? கருணாநிதியை மிஞ்சிட்டாரு ஸ்டாலின்! விளாசிய அதிமுக மாஜி

Subscribe to Oneindia Tamil

மதுரை: திமுக ஆட்சியில் வீட்டில் வளர்க்கும் நாய், பூனைகளுக்கும் வரி செலுத்தவேண்டும் என வரிமேல் வரி போட்டு மக்களை வாட்டி வதைக்கின்றனர் எனவும், சதுரங்க வேட்டை பட பாணியில் மக்களின் ஆசையை தூண்டி திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை அளித்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

மதுரை மாகப்பூபாளையம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்று பொதுமக்களுக்கு நலத் திட்டங்களை வழங்கினார்.

Sellur Raju aiadmk mk stalin

கூட்டத்தில் பேசிய அவர்," அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் உயர்கல்வி நிலையங்கள் அதிகரிப்பால் இடைநிற்றல் இல்லாமல் கல்வியில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்கி உலகம் முழுவதும் பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றனர்.

குறிப்பாக இஸ்ரோவில் கூட தமிழர்கள் உயர்பதவியில் அலங்கரித்து வந்துள்ளனர் மற்றும் வருகின்றனர். மடிக்கணினி வழங்கி மாணவர்களுக்கு வசதி படைத்து கொடுத்துள்ளார் முன்னாள் முதல்வர் ஜெ., பெண் சிசு பாதுகாவலர் என அன்னை தெரசா பாராட்டினார். கைலி கட்டியவர்கள் தீவிரவாதிகள் என்று கருணாநிதி சொன்னார். அத்தகைய திமுகவிற்கு இஸ்லாமியர்கள் வாக்கு செலுத்தியுள்ளனர். திமுகவினர் சிறுபான்மையினர் நலனுக்கு கொண்டுவந்த திட்டங்கள் என்ன? ஸ்டாலின் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை கடந்த 4 வருடங்களில் நிறைவேற்றாமல் உள்ளார்.

குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, காஸ் விலை குறைப்பு. சதுரங்க வேட்டை பட பாணியில் மக்களின் ஆசையை தூண்டி திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை அளித்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். ஸ்டாலின் எத்தனுக்கு எத்தனாக உள்ளார். கருணாநிதியை விஞ்சிவிட்டார். அதனை பீகார்காரன் சொல்லிக்கொடுத்துள்ளார். பெண் காவல் அதிகாரிக்கு கூட இந்த அரசால் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை. ஆனால் அவர்கள் 200 சீட்டில் வெற்றி பெறுவோம் என்று கூறுகின்றனர்.

அரிசி, பருப்பு, பால் உள்ளிட்டவைகளின் விலை உயர்வை புள்ளிவிவரங்களோடு பேசினார். மின்கட்டணம் இன்றைக்கு 52% உயர்ந்துள்ளது. 16 நாள் வெளிநாடுகளில் முதலீட்டை ஈர்க்க சென்றவர் சைக்கிளை மட்டுமே ஓட்டினார், எந்த முதலீட்டையும் பெற்று வரவில்லை. திமுக அமைச்சர்களில் 10 விழுக்காடு பேர் ஜாமீன் உள்ளவர்கள் தான், காற்றை விற்று ஊழல் செய்து விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்து வருகின்றனர். முன்பைவிட இன்றைக்கு தெளிச்சியாக உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

வேங்கைவயலில் உயர்மட்ட தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை இன்றளவும் கைது செய்யவில்லை, அண்ணா பல்கலை கழக மாணவி விவகாரத்தில் யார் அந்த சார்..? என்பதற்கு விடை தெரியவில்லை. மதகலவரம் செய்து மக்கள் பிரச்சனைகளை மடைமாற்றம் செய்கின்றனர். மும்மொழி கொள்கை விவகாரத்தில் பாஜகவும், திமுகவும் கள்ள கூட்டணியில் உள்ளனர் என்பது வெளிப்படையாக தெரிகிறது. அதனை மலுப்ப உதயநிதியும், அண்ணாமலையும் சண்டையிட்டு கொள்வது போல் தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

இன்றைக்கு நம் வீடுகளில் நாய், பூனை வளர்த்தால் வரி, வரி மேல் வரி போட்டு கொண்டு மக்களை வாட்டி வருகின்றனர், வரும் காலங்களில் மக்கள் சாலையில் நடந்தால் வரி என்றும் கூட சொல்லுவார்கள். அதிமுக 10 ஆண்டுகளில் பெற்ற 3.5 லட்சம் கோடி, ஆனால் திமுக கடந்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. தொடர்ந்து மக்களை ஏமாற்ற தயாராகி வருகின்றனர்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+