மன்னார்குடி கலகலக்க! மதுரை ஜில்லா மனமணக்க! செந்தில்கணேஷ் -ராஜலட்சுமி கச்சேரி! அதிமுக தொண்டர்கள் Vibe

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை அதிமுக மாநாட்டுத் திடலில் சோர்ந்து போய் அமர்ந்திருந்த தொண்டர்களை வைப் செய்ய வைக்கும் வகையில், செந்தில்கணேஷ் -ராஜலட்சுமி தம்பதியின் நாட்டுப்புற பாடல் கச்சேரி களை கட்டியது.

மதுரையில் காலை 8.30 மணியளவில் கொடியேற்றி வைத்து அதிமுக மாநாட்டை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்த நிலையில் கச்சேரி, சொற்பொழிவு என நான் ஸ்டாப் ஆக நடைபெற்று வருகிறது. அதிகாலையிலேயே மாநாட்டுக்கு கிளம்பியதால் மாநாட்டுப் பந்தலில் அமர்ந்திருந்த பலரும் மந்தமாக தூக்க கலக்கத்தில் காணப்பட்டனர்.

Senthil Ganesh-Rajalakshmi folk song concert was held in Madurai AIADMK conference

இதனால் அவர்களை வைப் செய்ய வைக்கும் வகையில், விஜய் டிவி புகழ் செந்தில்கணேஷ் -ராஜலட்சுமி தம்பதி நாட்டுப்புற பாடல்களை பாடத் தொடங்கியது. முதல் பாட்டாக மன்னார்குடி கலகலக்க.. மதுரை ஜில்லா மனமணக்க.. என்ற பாடலை பாட ஆரம்பித்தவுடன் மாநாட்டுத் திடலில் அமர்ந்திருந்த தொண்டர்கள் தலையை ஆட்டி டான்ஸ் போடத் டொடங்கினர்.

அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். பாடல்களை மற்றொரு இன்னிசைக் கச்சேரி குழு பாடியது. இதனால் அயர்ந்து போய் அமர்ந்திருந்தவர்கள் எனர்ஜி ஆனார்கள். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி பேச வந்தார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை காட்டிலும் எடப்பாடி பழனிசாமியை அவர் புகழோ புகழென புகழ்ந்து பேசினார்.

தலைவனும், தலைவியும் இல்லாத கட்சியை அண்ணனாக இருந்து வழிநடத்துவதாக ஐஸ் மழை பொழிந்தார். எழுதி எடுத்து வந்த பேப்பரை பார்த்து பேசியதையே மீண்டும் மீண்டும் கவிதை வாசிப்பது போல் பேசிக் கொண்டிருந்தார் வளர்மதி. அவரது பேச்சை அதிமுக தொண்டர்கள் பெரிதாக ரசிக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+