சோழவந்தான் தொகுதி.. மீண்டும் உதிக்கும் உதயசூரியன்? 30 ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகும் சம்பவம்!
மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் நகர்ப்புறங்களில் திமுகவும், புறநகரில் அதிமுகவும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆனால் புறநகர் தொகுதிகளில் சோழவந்தான் தொகுதியில் மட்டும் திமுக தீவிரமாக பணியாற்றி வருகிறது. தனி தொகுதியான சோழவந்தான் தொகுதியில் மீண்டும் சிட்டிங் எம்எல்ஏ-வான வெங்கடேசனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
2021 சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட வெங்கடேசன் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் மாணிக்கத்தை வீழ்த்தினார். வாடிப்பட்டி, மதுரை வடக்கு வட்டங்களை தொகுதியான சோழவந்தான் தொகுதியில், பட்டியல் சமூக மக்கள் அதிகளவிலான எண்ணிக்கையில் இருக்கின்றனர். அதேபோல் முக்குலத்தோர் சமூக மக்கள் கணிசமாக வசிக்கின்றனர்.

இதையடுத்து சிறுபான்மை மக்களும், நாடார் சமூக மக்களும் வாழ்கின்றனர். ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகள் இந்த தொகுதிக்குள் வருகின்றன. அதற்கேற்ப ஜல்லிக்கட்டு மைதானம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் விவசாயம் சார்ந்த பகுதி என்பதால், தண்ணீர் வசதிகள் மக்களின் முக்கிய பிரச்சனையாக இருந்து வந்தது.
அதனை திமுக எம்எல்ஏ வெங்கடேசன் பொறுப்புக்கு வந்த உடன் வைகை கூட்டுக் குடிநீர் திட்டம் மூலமாக செய்து கொடுதார். அதேபோல் அரசுப் பள்ளிகளுக்கு கூடுதல் கட்டடங்கள், சாலை வசதிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் அதிமுக சார்பாக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த முறையும் இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.
இந்த தோல்விக்கு பின் உடனடியாக பாஜக பக்கம் சென்ற அவர், அடுத்த சில மாதங்களிலேயே அதிமுகவுக்கு வந்தார். இருப்பினும் ஆர்பி உதயகுமார் ஆதரவாளர் என்பதால், மீண்டும் எப்படியோ சீட்டை கைப்பற்றிவிட்டார். இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பையா தவெக பக்கம் சென்று வேட்பாளராகிவிட்டார். இதன் காரணமாகவே களம் சூடுபிடித்துள்ளது.
கிராமப் பகுதிகளில் தவெகவுக்கு பெரிதாக ஆதரவு இல்லையென்றாலும், சோழவந்தான் பகுதியில் முன்னாள் எம்எல்ஏ கருப்பையாவுக்கு நல்ல ஆதரவு இருக்கிறது. மாணிக்கம் பாஜகவுக்கு தாவியதால், அவர் மீதான நம்பிக்கை அதிமுகவினர் மத்தியிலும் குறைவாகவே உள்ளது. இதனால் அதிருப்தியில் இருக்கும் அதிமுகவினர் தவெக சார்பாக போட்டியிடும் கருப்பையாவுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று பார்க்கப்படுகிறது.
அதேபோல் அமைச்சர் மூர்த்தியின் கட்டுப்பாட்டில் தொகுதி இருப்பதால், முக்குலத்தோர் சமூக வாக்குகளை ஒருங்கிணைத்து சோழவந்தான் தொகுதியை திமுக கைப்பற்றும் என்று தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் திமுக மீதான அதிருப்தி வாக்குகளை தவெக பிரிக்கும் என்பதால், சோழவந்தான் தொகுதியில் மீண்டும் உதயசூரியன் உதிக்கும் என்று தெரிகிறது. 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ மீண்டும் போட்டியிட்டு வென்றதே இல்லை. அந்த சாதனையை வெங்கடேசன் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
234 தொகுதியிலும் திமுக கூட்டணிதான்.. யார் என்ன செய்தாலும் வெற்றியை தடுக்க முடியாது - ஸ்டாலின் உறுதி -
"தமிழகத்தில் டெல்லி மாடல்.." அதிமுக பெரும்பான்மை பெற்றாலும் என்டிஏ ஆட்சிதான்.. ராம்தாஸ் அத்வாலே பரபர -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்? இதுதான் காரணம் - எடப்பாடி சொன்ன சீக்ரெட்! -
2021 Vs 2026... காலம் மாறிபோச்சு... எய்ம்ஸ் பற்றி பேசாத திமுக..! ‘நீட்’ பற்றி பேசும் அதிமுக! -
“எடப்பாடி பழனிசாமி ஒரு மனநல மருத்துவரை பார்த்து பரிசோதிப்பது நல்லது”.. திமுக பெண் தலைவர்கள் தாக்கு -
62 தொகுதிகளில் சர்ஜிக்கல் திமுகவின் மெகா ஆபரேஷன்.. அதிமுகவுக்கு எதிராக ரகசியமாக இறங்கிய 2 டீம்? -
“எனக்கும் சிற்றரசுவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு”.. அண்ணா நகரில் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின்! -
ஸ்டாலின், விஜய் தொகுதிகளை விடுங்க.. ரெக்கார்டு படைக்கும் கரூர்.. தமிழகத்திலேயே அதிக வேட்பாளர்கள்! -
திருமா பெயரை சொன்ன போது.. அப்படியே அமர்ந்திருந்த பிரேமலதா? உண்மையில் என்ன கோபம்? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications