தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு! மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு தயார்!
மதுரை: தமிழகத்தில் கொரோனா பரவல் எதிரொலியை அடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் தென் மாவட்டங்களில் முக்கிய மருத்துவமனையாக விளங்கும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா வார்டு தயார் நிலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.
இங்கு பெரியவர்களுக்கு 30 படுக்கைகள், சிறியவர்களுக்கு 20 படுக்கைகள் என மொத்தம் 50 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதுபோல கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அதிநவீன மருத்துவ உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
காய்ச்சல் வார்டுகளில் சிகிச்சைக்கு வந்து செல்பவர்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருக்கிறதா என கண்காணிக்கப்படுகிறது என்றும், அவ்வாறு பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அவர்களுக்கு சிறப்பு வார்டில் சிகிச்சை வழங்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு மருத்துவமனைக்கு வந்து செல்பவர்கள் முகக் கவசம் அணிந்து வந்தால் நோய் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த முடியும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது கொரோனாவின் தாக்கம் கடந்த 2020, 2021 ஆண்டுகளில் இருந்ததை போல் தீவிரமாக இல்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதிலும் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், நுரையீரல் தொடர்பான நோய், நாள்பட்ட நோய்கள் இருப்போர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்போர் எல்லாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்?












Click it and Unblock the Notifications