துபாய் செல்ல வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானம் ரத்து.. திடீர் அறிவிப்பால் மதுரையில் பயணிகள் வாக்குவாதம்!
மதுரை: துபாயில் இருந்து மதுரை வரும் ஸ்பைஸ்ஜெட் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. அந்த விமானம் திரும்பிச் செல்லும்போது அதில் செல்ல இருந்த 168 பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் தினமும் விமான சேவை வழங்கி வருகிறது. துபாயில் இருந்து காலையில் புறப்பட்டு மதுரைக்கு வரும் விமானம் மீண்டும் மதுரையில் இருந்து கிளம்பி துபாய் செல்லும்.

மதுரையில் இருந்து இன்று பகல் 12 மணிக்கு துபாய் செல்வதற்காக 70 பயணிகளுடன் புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் விமான நிர்வாகம் அறிவித்தது.
துபாயில் இருந்து மதுரை வரும் ஸ்பைஸ்ஜெட் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் முன்னறிவிப்பு எதுவும் கொடுக்காமல், பயணிகள் மதுரை விமான நிலையம் வந்தவுடன் விமான சேவை ரத்து செய்வதாக அறிவித்துள்ளதால் பயணிகள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர்.
மேலும், ஸ்பைஸ்ஜெட் ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். பயணிகளின் வாக்குவாதம் காரணமாக பயணிகளின் பயண திட்டத்தை நாளை அல்லது நாளை மறுநாள் மாற்றம் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications