ரயில்வே துறையில் பாஜகவின் வஞ்சகம்.. தெற்கு ரயில்வேக்கு ரூ.301 கோடி ஒதுக்கீடு! டென்ஷனான சு.வெங்கடேசன்
மதுரை: தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களுக்கு ரயில்வே துறையில் மத்திய பாஜக அரசு வஞ்சகம் செய்வதாக எம்பி சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார். 2024-25ஆம் ஆண்டில் புதிய வழித்தடத்திற்கு ரூ.31,458 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், அதில் தெற்கு ரயில்வேவுக்கு வெறும் ரூ.301 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டதாக கொந்தளித்துள்ளார்.
இதுதொடர்பாக சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூத்த குடிமக்களுக்கான ரயில் பயணச்சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். 2020ல் நிறுத்தப்பட்ட இந்த சலுகையால் மூத்தோர் மருத்துவம் மற்றும் திருத்தலப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் திணறி வருகிறார்கள். அதேபோல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பயணக் கட்டண சலுகைகளும், அபார ரத்து முடிவுகளும் கேள்விக்குறியாக இருக்கிறது.

பிங்க் புத்தகத்தை மீண்டும் வெளியிட வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக பிங்க் புத்தகம் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடியும் வரை வெளியிடப்படாததால், மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு வெளிப்படையான தகவல் கிடைக்கவில்லை. அதேபோல் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்கள் புதிய ரயில் பாதைகளுக்கு கடுமையான புறக்கணிப்பு நடைபெறுகிறது.
பட்ஜெட்டில் புதிய ரயில் பாதைகளுக்கு ரூ.31,458 கோடி ஒதுக்கப்பட்டாலும், தெற்கு ரயில்வேவுக்கு அதில் வெறும் ஒரு சதவிகித நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது சுமார் ரூ.301 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் மதுரையில் 2வது முனையம் அமைப்பது அவசியம். கோவை ஃபிளாட்ஃபாரங்கள் அதிக கூட்ட நெரிசலுடன் செயல்பட்டு வருவதால், போத்தனூரை இரண்டாவது முனையமாக மாற்ற வேண்டும்.
அதேபோல் மதுரை கூடல் நகர் ரயில் நிலையத்தை 2வது ரயில் முனையமாக உருவக்க வேண்டும். ரயில் பாதுகாப்பை உறுதி செய்ய இண்டர்கால் செய்யாத கேட்டுகளை உடனடியாக இண்டர்லாக் கேட்டுகளாக மாற்றுவதற்கு போதிய நிதி வழங்க வேண்டும். அண்மையில் செம்மங்குப்பத்தில் ஏற்பட்ட பள்ளி குழந்தைகள் உயிரிழப்புக்கு இண்டர்லாக் கேட்டுகள் இல்லாததே காரணம்.
அதேபோல் கொல்லம் - நாகூர் விரைவில் ரயிலை மீண்டும் இயக்க வெண்டும். தெற்கு ரயில்வேயில் உள்ள ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்ப அனுமதி வழங்க வேண்டும். இறுதியாக மதுரையில் இருந்து மேலும் பல பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications