ஹலோ பிடிஆர்.. ஸ்கூல் பையன் மாதிரி.. வாய்சவடால்விட்ட குஷ்பு.. சுந்தர்.சி-யை கோர்த்துவிட்ட மனைவி!
மதுரை: மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக இயக்குநர் சுந்தர்.சி வேட்பாளராக களமிறங்கி இருக்கும் நிலையில், அதே தொகுதியில் திமுக சார்பாக நிற்கும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறித்து நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு பதிவிட்டுள்ள பழைய ட்வீட்கள் டிரெண்டாகி வருகிறது.
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி சார்பாக இயக்குநர் சுந்தர்.சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். திமுக சார்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் களமிறக்கப்பட்டிருக்கிறார். இந்த தொகுதியில் ஏற்கனவே இரு முறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வென்று இருக்கிறார். சுந்தர்.சி வெளியூர்காரர் என்பதோடு, மதுரை மத்திய தொகுதி எல்லைகள் கூட தெரியாதவர்.

நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவின் அழுத்தம் காரணமாக சுந்தர்.சி அரசியல் களமிறங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. பாஜகவில் தனக்கு சீட் கொடுக்கப்படாததால், ஆஸ்தான தயாரிப்பாளரான ஏசி சண்முகம் மூலம் ஒரு சீட் பெற்று குஷ்பு தனது கணவரை களமிறக்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது. சுந்தர்.சி-க்கு இருக்கும் ஒரே சாதகம் இரட்டை இலை சின்னம் தான்.
இதனால் தனது கணவருக்கு ஆதரவாக குஷ்புவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று தெரிகிறது. வேட்புமனு தாக்கலின் போதே இரட்டை இலை சின்னமான பச்சை நிறத்தில் சேலை அணிந்து வந்திருக்கிறார். இதனிடைடே நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருந்த போது, அவரை வம்புக்கு இழுத்து குஷ்பு பதிவிட்டுள்ள ட்வீட் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
2022ஆம் ஆண்டு மத்திய அரசு தமிழ்நாட்டிற்கான ஜிஎஸ்டி நிலுவை தொகையை விடுவித்தது. அதற்கு பாஜக நிர்வாகி குஷ்பு, என்ன பிடிஆர் ஹலோ.. இப்போ என்ன? பெட்ரோல், டீசல் விலையில் நீங்கள் வரியை குறைப்பீர்களா? இல்லை நீங்கள் தேவையின்றி மீண்டும் கத்தி கத்தி பேசுவீர்களா? பெட்ரோல், டீசல் பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசுவாரா?
இல்லை ஸ்கூல் பையன் போல தொடர்ந்து புகார் லெட்டர்களை அனுப்புவாரா? என்று பதிவிட்டார். தற்போது பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராகவே குஷ்பு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதனால் திமுகவினர் நடிகை குஷ்பு மீதான ஆவேசத்தை சுந்தர்.சி-க்கு எதிராக தேர்தலில் காட்ட தயாராகி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications