சுந்தர்.சி ஒரு சந்தர்ப்பவாதி.. 60% வாக்கு பெற்று வெல்வேன்.. சவால்விட்ட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் என்டிஏ கூட்டணி வேட்பாளர் சுந்தர்.சி இடையிலான வார்த்தை மோதல் சாமானிய மக்களிடையே கவனத்தை பெற்றுள்ளது. சுந்தர்.சி-யின் சில வார்த்தைகளால் டென்ஷனான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், சினிமா சங்கி என்று கொந்தளித்தார்.

ஆனால் தேவையில்லாத வெளிச்சத்தை சுந்தர்.சி-க்கு கொடுக்க வேண்டாம் என்று தற்போது பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அமைதி காத்து வருகிறார். இதுதொடர்பாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், அரசியலுக்கு வருவதற்கு யாருக்கும் தகுதி இருக்க கூடாது என்பதே ஜனநாயகம்.

Sundar C

ஆனால் உங்களுக்கும், மதுரை மத்திய தொகுதிக்கும் என்ன சம்பந்தம் என்ற கேட்டால், என்றாவது எம்எல்ஏ ஆகலாம் என்று நினைத்தேன்.. என் தயாரிப்பாளர் என்னை அழைத்து மதுரையில் சீட் ஒதுக்கினார்கள்.. அதனால் வாங்க என்று அழைத்தார். இப்போது வந்துவிட்டேன் என்கிறார். அது மதுரைக்காரர்களுக்கு அவமரியாதை. சுந்தர்.சி-க்கு மக்களுடன் எந்த கனெக்ட் இருக்கவில்லை.

மக்களுடன் மக்களாக எந்த பிரச்சனைக்கும் நிற்கவில்லை. கடந்த 4 தேர்தலாக எதிர்க்கட்சி வேட்பாளர்களை நான் ஒருமுறை கூட கண்டித்து கூட பேசியதே இல்லை. என்னுடைய பட்ஜெட் தாக்கலின் போது, 2003 முதல் 2016-2021 வரையிலான பட்ஜெட் உரைகளின் டேட்டாவை எடுத்தேன். ஒரு விஷயத்தை தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்பதே எனது வாதம். சுந்தர்.சி-க்கு மதுரை மத்திய தொகுதி குறித்து ஒரு விஷயம் கூட தெரியாது.

மதுரை மத்திய தொகுதியில் பள்ளி எங்க இருக்கு, மருத்துவமனை எங்க இருக்கு, ரேஷன் கடை கூட எங்கு இருக்கிறது என்று தெரியாது. மக்கள் பிரச்சனைக்காக ஏதாவது ஒரு விஷயத்திற்காக குரல் கொடுத்துள்ளாரா? பொதுநலனுக்காக சொந்த பணத்தை செலவு செய்துள்ளாரா? சுந்தர்.சி ஒரு சந்தர்ப்பவாதி.. புதிய நீதிக் கட்சி ஒரு சாதிய கட்சி..

பழைய நீதிக் கட்சி வாரிசுகள் தேவையில்லை என்று அண்ணாமலை பேசியதுதான் கொந்தளிக்க வைத்துவிட்டது. நீதிக் கட்சி என்ற பெயர் எதற்காக வந்தது? எங்கள் குடும்பத்தில் கடைசியாக முதலியார் என்ற சாதிய அடையாளத்தை பயன்படுத்தி கொள்ளு தாத்தா காலத்தில் தான். அதன்பின் அனைவரும் ராஜன் என்ற பெயரையே பயன்படுத்தி வருகிறோம்.

நீதிக் கட்சியின் வரலாற்றை சுரண்டி, ஏ.சி.சண்முகம் தனது கட்சிக்கு அந்த பெயரை பயன்படுத்தி வருகிறார். வாக்கு எண்ணிக்கை அன்று 60% வாக்குகளை நான் கட்டாயம் வெல்வேன். சமுதாயத்தின் மக்களை வாக்குகளாக மட்டுமே சுந்தர்.சி பார்க்கிறார் என்று தெரிவித்துள்ளார். பழனிவேல் தியாகராஜனின் பேட்டி சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+