Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவரு சினிமா இயக்குநருயா.. என்ன பண்ணி வச்சுருக்கீங்க.. சுந்தர் சிக்கு டப்பிங் கொடுத்த ஏ.சி.சண்முகம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் எதிர்பார்த்த கட்சிகள் இணையவில்லை. ஆனால் இருக்கின்ற கட்சிகளின் பெயர்களையும் சரியாக சொல்ல முடியாமல் நிர்வாகிகள் திணறி வருகிறார்கள். ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூட்டணி கட்சி பெயர்களை சொல்ல முடியாமல் தவித்த நிலையில், அதே பாணியில் சுந்தர் சி சிக்கி தவித்துள்ளார்.

களம் காணும் சுந்தர் சி

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், புதிய நீதிக் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதி கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது. சினிமா இயக்குநரும், பாஜக மாநில துணை தலைவருமான குஷ்புவின் கணவர் சுந்தர் சி களம் காண்கிறார். திமுக அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக கடுமையான போட்டியளிக்க இந்த முடிவை எடுத்துள்ளனர்.

sundar-c-sundar-c-struggled-to-recall-the-names-of-his-partys-allies

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சுந்தார் சி, "மதுரை மீனாட்சி அருளாளலும், மக்களின் ஆதரவாலும் மண்ணின் மைந்தனான நான் வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன். வேட்பாளராக முதல்முறையாக மதுரை வந்து பேட்டியளிக்கிறேன். சினிமாவுக்காக எத்தனையோ பேட்டி வழங்கியுள்ளேன். இந்த களம் எனக்கு புதிது" என்றார். அதிமுக எடப்பாடி பழனிசாமி, புதிய நீதிக்கட்சி ஏ.சி சண்முகம், பாஜக நயினார் நாகேந்திரன், பாமக அன்புமணி ராமதாஸ் சரியாக சுந்தர் சி சொல்லிவிட்டார்.

தடுமாற்றம்

அதன் பிறகு மற்ற கட்சிகளின் பெயர்களை சொல்ல தடுமாறினார். பின்னால் இருந்த சக நிர்வாகிகள் எடுத்துக் கொடுத்தனர். அமமுக என்பதற்கு பதிலாக அமுமுக தினகரன் என்று தவறாக சொன்னார். அதையடுத்து தட்டு தடுமாறி ஐஜேகே பாரிவேந்தர், தமாகா ஜிகே வாசன் பெயர்களை சொல்லிவிட்டார். ஏசி சண்முகம் சொன்னதால் ஜான் பாண்டியனின் பெயரை கூறினார். அவரின் கட்சி பெயர் தெரியாததால் ஜான் பாண்டியன் பெயரோடு நிறுத்திவிட்டார்.

வைரலாகும் வீடியோ

திருமாறன் பெயரையும் ஏ.சி. சண்முகம் எடுத்துக் கொடுத்ததால் சுந்தர் சி சொன்னார். ஒரு வழியாக முடித்துவிட்டு, "அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் நன்றி" என்று சொல்லிவிட்டார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள், "சினிமா இயக்குநருக்கே ஒருத்தர் வசனம் எழுதி டப்பிங் கொடுக்க வேண்டியதா இருக்கு", "இதற்கு ஏ.சி சண்முகமே மைக்கில் பெயர்களை சொல்லியிருக்கலாம்" என்று கலாய்த்து கமென்ட் செய்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+