ரயில் பெட்டிகளில் சிசிடிவி பொருத்த நடவடிக்கை எடுங்கள்.. தென்னக ரயில்வேக்கு நீதிமன்றம் உத்தரவு
மதுரை: திருச்சி ரயில்வே காவல்துறையை சேர்ந்த வினோத் என்பவர் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பணியில் இருந்த போது, பெண் பயணி ஒருவரிடம் வரம்பு மீறி பேசியதாக புகார் எழுந்தது.
கடந்த 2015-ம் ஆண்டு நிகழ்ந்த இச்சம்பவத்திற்காக வினோத் அப்போதே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி, வினோத் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், குற்றம்சாட்டப்பட்டவருடன் சம்பவத்தின் போது பணியாற்றிய பெண் காவலரும் வினோத் மது அருந்தியிருந்ததாக தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பெண் பயணியிடம் வரம்பு மீறி பேசியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது என்றார் நீதிபதி. மேலும் வினோத் மீது துறைரீதியான நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், இது நீதிமன்றத்திற்கு வேதனையளிப்பதாக உள்ளது எனவும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். பெண் பயணியிடம் வரம்பு மீறிய வினோத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
பெண்கள் தனியே பயணிப்பது இயல்பாக நடைபெறும் நிகழ்வாக உள்ள இந்த காலக்கட்டத்தில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.சில நாடுகளில் பஸ்கள், ரயில்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு பயணிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன.
அது போன்ற கொள்கை தென்னக ரயில்வேயிலும் நடைமுறைப்படுத்தப்படுவது அவசியம். ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தால், இதுபோன்ற புகார்கள் எழும்போது அதனை உறுதி செய்ய உதவும் என குறிப்பிட்டார் நீதிபதி.
எனவே ரயில்களில் பயணிக்கும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோா் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரயில் கோச்கள் மற்றும் கம்பார்ட்மெண்டுகளில், சிசிவிடி பொருத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக ஓடும் ரயில்களில் பணிபுரியும் காவலர்களுக்கு, உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தென்னக ரயில்வே, விரைவாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார் நீதிபதி சுப்பிரமணியம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications