பேருந்து கட்டணம் உயர்வு.. அரசு எக்ஸ்பிரஸ் பஸ்ஸில் "ஸ்டிக்கர்".. தாறுமாறு டிக்கெட்.. என்னாச்சு பாருங்க
மதுரை: அரசு பஸ்களில், "எக்ஸ்பிரஸ்" என்று ஸ்டிக்கர்களை ஒட்டி, அதிகம் கட்டணம் வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கில், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து மனுதாரருக்கு பதிலளிக்குமாறு மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி முசிறி வழக்கறிஞர் ராஜேந்திரன் கடந்த 2018ல் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தொலைதூர பஸ்கள் இயக்கப்படுகின்றன... அவற்றில் இருக்கை வசதிகள் மிகவும் மோசமாக இருக்கின்றன.
முதலுதவி பெட்டிகள், வழித்தட வரைபடங்கள் இருப்பதில்லை... சாதாரண பஸ்களை எக்ஸ்பிரஸ் உட்பட பல்வேறு பெயர்களில் இயக்குகின்றனர். அனைத்து ஸ்டாப்களிலும் பஸ்களை நிறுத்தி பயணிகளை அழைத்துச் செல்கின்றனர். பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். வருவாய் ஈட்டும் நோக்கில் போக்குவரத்துக் கழக நிர்வாகம் சட்டவிரோதமாக செயல்படுவதால், பயணிகள் ஏமாற்றத்திற்குள்ளாகின்றனர்.

நடவடிக்கை தேவை: இதுகுறித்த புகார்களை, தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், போக்குவரத்துத்துறை செயலாளருக்கு அனுப்பினேன். கும்பகோணம், விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
போக்குவரத்து கழக தலைவர், அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாண் இயக்குநர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த மனுவானது, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஜி.இளங்கோவன் ஆகிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது, "சட்டம் மற்றும் விதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதில், ஏதாவது விதிமீறல் இருந்தால் விதிகளின்படி அபராதம் விதிக்கலாம். குறிப்பிட்ட விதிமீறல்கள் சுட்டிக் காட்டப்பட வேண்டும்.
பைசல்: மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக ஏற்கனவே அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். இந்த மனுவின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் 4 மாதத்திற்குள் உரிய பதிலை மனுதாரருக்கு வழங்க வேண்டும்.. தனக்கு வழங்கப்படும் பதிலை பொறுத்து மனுதாரர் உரிய மேல் நடவடிக்கை எடுக்கலாம்.. வழக்கு பைசல் செய்யப்படுகிறது" என்று கூறி மனுவை முடித்து வைத்தனர் நீதிபதிகள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications