50 தமிழ் உரைகள்.. நாடாளுமன்ற வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை.. சு.வெங்கடேசன் பெருமிதம்!
மதுரை: சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு கூட்டத்தொடரிலேயே ஐம்பது உரைகள் தமிழிலே நிகழ்த்தப்பட்டது இந்த குளிர்கால கூட்டத்தொடரில் தான் என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது தான் இந்தி திணிப்பிற்கும், சமஸ்கிருத திணிப்பிற்கும் தமிழ்நாடு ஆற்றும் எதிர்வினை என்றும் கூறியுள்ளார்.
டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 20ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்தக் கூட்டத் தொடரில் லோக்சபா 92 மணி நேரம் 25 நிமிடங்களும், மாநிலங்களவை 92 மணி நேரமும் செயல்பட்டுள்ளது. வந்தே மாதரம் விவாதம், SIR விவாதம், 100 நாள் வேலைத் திட்டம் மாற்றம் விவாதம் நடைபெற்றது.

அதேபோல் 300 நட்சத்திர கேள்விகளும், 3,449 நட்சத்திர குறியீடு அல்லாத கேள்விகளும் அனுமதிக்கப்பட்டன. அதில் 300 நட்சத்திர கேள்விகளில் 72 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. அதேபோல் 8 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. லோக்சபாவில் 137 தனிநபர் மசோதாக்களும், ராஜ்ய சபாவில் 59 தனிநபர் மசோதாக்களும் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுதியுள்ள பதிவு சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. அதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தி, ஆங்கிலம் அல்லாத மொழியில் அதிகமாக உரை நிகழ்த்தியது இந்த கூட்டத்தொடரில் தான். அதில் அதிகமாக உரை நிகழ்த்தப்பட்ட மொழி தமிழ்.
சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு கூட்டத்தொடரிலேயே ஐம்பது உரைகள் தமிழிலே நிகழ்த்தப்பட்டது இந்த குளிர்கால கூட்டத்தொடரில் தான். இது தான் இந்தி திணிப்பிற்கும், சமஸ்கிருத திணிப்பிற்கும் தமிழ்நாடு ஆற்றும் எதிர்வினை என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் சு.வெங்கடேசன் பேசிய வீடியோவில், ஏறக்குறைய 80க்கும் அதிக எம்பிக்கள் இந்தி, ஆங்கிலம் மொழிகளில் பேசவில்லை.
தங்களின் தாய்மொழியிலேயே பேசி இருக்கின்றனர். அதில் 50க்கும் மேல் தமிழ் உரைகள் இடம்பெற்றன என்று தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசு கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்தி திணிப்புக்கு எதிராகவும் தமிழ்நாட்டில் தொடர்ந்து விவாதங்கள் நடந்து வரும் சூழலில், நாடாளுமன்றத்திலும் தாய்மொழியில் அதிக எம்பிக்கள் உரையாற்றி வருவது பேசுபொருளாகி இருக்கிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications