திமுக முருகர் புகைப்படம் வைக்குமா?.. பெரியார் படம் அகற்றம் குறித்து தமிழிசை விளக்கம்
மதுரை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக -பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். மதுரை அதிமுக - தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நுழைவு வாயிலில் இருந்த பெரியார் புகைப்படம் அகற்றப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "தமிழ்நாடு வந்தாரை வாழ வைக்கும், வரவேற்கும் பூமி. சாதாரண கிராமத்திற்கு சென்றால் கூட வீட்டிற்கு வரும் யாராக இருந்தாலும் அவர்கள் அமர்வதற்கு திண்ணை போடப்பட்டிருக்கும். தமிழ் தமிழ் என்று முதலமைச்சர் பொய்யாக பேசிக் கொண்டிருக்கிறார்.

அரசியல் காழ்புணர்ச்சி
தமிழ்நாடு வரும் பிரதமரை வரவேற்பதில் முதலமைச்சருக்கு என்ன பிரச்சனை. தமிழ் கலாச்சாரத்தை பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை. பிரதமர் ஏதோ அரசியலுக்காக தமிழ்நாடு வரவில்லை. தமிழ்நாட்டிற்கு ரூ.6,000 கோடி மதிப்பிலான திட்டத்தை செயல்படுத்துவதற்காக வருகிறார். எதுவும் தரவில்லை தரவில்லை என்கிறீர்கள்.
திட்டத்திற்காக வரும் பிரதமரை வரவேற்பது புரோட்டோகால். அதைக் கடந்து அது ஒரு பண்பு. இதை என்னால் ஏற்க முடியவில்லை. இதேபோல் இருந்த தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் இன்றைக்கு வீட்டில் இருக்கிறார். அவரை வரவேற்க வேண்டும் என யாரும் தேடுவதில்லை. தனிப்பட்ட காழ்புணர்ச்சி அரசியல் ஒழிய வேண்டும் என்பது என்னுடைய கருத்து.
திமுக முருகர் படம் வைக்குமா
ஒரு நல்ல கலாச்சாரம் திமுகவால் மறைக்கப்பட்டு வருகிறது. கூட்டணி கட்சிகளை பாஜக அடிமைப்படுத்துகிறது என்று புகார் கூறி வருகின்றனர். நாங்கள் ஜனநாயக முறைப்படி கூட்டணி அமைத்துள்ளோம். கூட்டணி கட்சிகளை அவர்களின் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள். கூட்டணி கட்சிகளுக்க யார் அழுத்தம் கொடுக்கிறார்கள்.
இந்த திமுக அரசு எல்லாவற்றிலும் பணம் செலவு செய்து விளம்பரம் மட்டும் தான் செய்கிறது. திமுக கூட்டணியை தேஜகூ வீழ்த்தும். இன்னும் 2 மாதங்களில் ஆட்சி மாற்றம் நிச்சயம். மாநாடு நடத்துவோர் தான் அதில் யாருடைய படம் இடம்பெற வேண்டும் என முடிவு செய்வார்கள். திமுக கூட்டங்களில் எல்லா இடங்களிலும் முருகர் படம் வையுங்கள் என்றால் வைப்பார்களா.
மரியாதை கொடுப்போம்
மதுரையில் கூட்டம் நடத்தினால் மீனாட்சி அம்மன் படத்தை வைப்பார்களா. எங்கள் கூட்டத்தில் எந்த தலைவரின் படம் இடம்பெற வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம். நாங்கள் அனைத்துத் தலைவர்களுக்கும் மரியாதை கொடுப்போம். ஆனால் எங்கள் கொள்கைக்கு நேர் எதிராக உள்ள ஒருவரின் படம் இருக்க வேண்டுமா என யோசித்தோம். அவ்வளவுதான்" என்றார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications