ஒரு காலத்தில் விமர்சித்த வாய்கள், இப்போ எடப்பாடி ஆட்சியை பாராட்டுகின்றன: சிங்கை ராமச்சந்திரன் பேட்டி
மதுரை: எடப்பாடி பழனிச்சாமி முதன்முறையாக பொதுச் செயலாளராக வந்த போது, முதலமைச்சராக பதவி ஏற்ற போது வைக்கப்படாத விமர்சனங்களா? அதே வாய்கள்தான் இன்று அவரைப் போல ஒரு முதலமைச்சர் நான்கு வருடம் சிறப்பாக ஆட்சி செய்தார் என பாராட்டுகிறார்கள் என அதிமுக மாணவரணி மாநில செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவுக்கு இளம் பேச்சாளர்களை உருவாக்கும் வகையில் அதிமுக மாணவரணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதிமுக பொதுச் செயலாலர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆலோசனையின் பேரில் தமிழகத்தை 9 மண்டலங்களாக பிரித்து இளம் பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரையில் திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த இளம் பேச்சாளர்களை தேர்வு செய்ய முகாம் நடைபெற்றது.
அதிமுக மாணவரணி:
இதில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் அவர்களது செயல்பாடுகளின் அடிப்படையில் 27 பேர் சென்னை பயிற்சி முகாமுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தேர்வு முகாமில் அதிமுக மாணவரணி மாநில செயலாளர் சிங்கை ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை தேர்ந்தெடுத்தனர்.
சிங்கை ராமச்சந்திரன்:
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"அதிமுக பொது செயலாளர் தமிழ்நாடு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆலோசனையின் பெயரில் அதிமுகவுக்கு இடம் பேச்சாளர்களை தேர்வு செய்ய தமிழகம் முழுவதும் முகாம் நடைபெற்றுள்ளது. ஒன்பது மண்டலங்களில் தேர்வு நடைபெற உள்ள நிலையில் இதுவரை ஏழு மண்டலங்களில் நிறைவு பெற்றிருக்கிறது. மதுரையில் எட்டாம் கட்டமாக இளம் பேச்சாளர்கள் தேர்வு முகாம் நடைபெற்றிருக்கிறது. இந்த முகாமில் திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட அதிமுக 11 மாவட்டங்களில் இருந்து 27 இளம் பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக இளம் பேச்சாளர்கள்:
இதுவரை தமிழக முழுவதும் எட்டு முகாம்கள் மூலம் 200-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். நாளை திருநெல்வேலியில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த முகாமும் முடிவடைந்த உடன் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சென்னையில் ஐந்து நாள் பயிற்சி அளிக்கப்படும். அதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இளம் பேச்சாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
அதிமுக:
அதிமுக அதிக வலிமையாக இருக்கிறது. எங்கு போனாலும் ஆட்சி மாற்றம் எப்போது ஏற்படும் என மக்கள் கேட்கிறார்கள். மின்சார கட்டணம் உயர்வு, வீட்டு வரி உயர்வு, மாதம் ஒருமுறை மின்கட்டணம் என ஏமாற்றி விட்டார்கள், முதியோர் ஓய்வூதிய தொகை ஆயிரத்திலிருந்து ஆயிரத்து 500 ஆக உயர்த்தினாலும் இதுவரை வழங்கவில்லை. கல்வி கடனை ரத்து செய்யவில்லை, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முடக்கி விட்டார்கள், லேப்டாப் திட்டங்களை நிறுத்தி விட்டார்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
முக ஸ்டாலின்:
எனவே திமுக ஆட்சி மீது மக்கள் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள். நேற்று கூட ஒரு உணவகத்தில் ஒரு பெண் எங்களது அதிமுக வேட்டியை பார்த்துவிட்டு நீங்கள் எல்லாம் அதிமுகவா எப்படியாவது திமுகவை விரட்டி விடுங்க என்கிறார்கள். என்ன நடக்குது என்றே தெரியவில்லை என புலம்புகிறார்கள். முதலமைச்சர் செயல்படாத முதலமைச்சராக இருக்கிறார். அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வேண்டும் என சொல்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி:
அனைத்து மக்களும் அதையே சொல்கிறார்கள். உறுதியாக 2026 இல் அதிமுக ஆட்சி அமைக்கும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆவது உறுதி. மக்களும் மகிழ்ச்சியோடு பல திட்டங்களை அனுபவிப்பார்கள். அதிமுக கூட்டணி தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் வருகிறது. 1000 பேர் ஆயிரம் விமர்சனங்கள் சொல்வார்கள். எடப்பாடி பழனிச்சாமி முதன்முறையாக பொதுச் செயலாளராக வந்த போது முதலமைச்சராக பதவி ஏற்ற போது வைக்கப்படாத விமர்சனங்களா? அதே வாய்கள்தான் இன்று அவரைப் போல ஒரு முதலமைச்சர் இல்லை, நான்கு வருடம் சிறப்பாக ஆட்சி செய்தார் என பாராட்டுகிறார்கள்.
அதிமுக கூட்டணி:
விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கும். காய்த்த மரம் தான் கல்லடி படும். கூட்டணியை எடப்பாடி பழனிசாமி பார்த்துக் கொள்வார். அவர் காட்டும் திசையை நோக்கி கண்ணசைவில் கட்டுப்பட்டு வேலை பார்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.
-
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications