Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடனுக்கு டீ கொடுக்க மறுப்பு.. டீக்கடைக்காரர் படுகொலை.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கடனுக்கு டீ கொடுக்காத டீக்கடைக்காரர் படுகொலை

    மதுரை: கடனுக்கு டீ கொடுக்க மறுத்த டீ கடை உரிமையாளரை ஆறு இளைஞர்கள் சேர்ந்து வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மதுரை கிருஷ்ணாபுரக்காலணி பாரதி தெருவில் டீக்கடை நடத்தி வருபவர் மாரிமுத்து. இவர் டீக்கடையில் சில இளைஞர்கள் கடனுக்கு டீ கொடுக்க வற்புறுத்தி வந்துள்ளனர்.

    Tea seller was murdered by some youths in Madurai

    அதற்கு மாரிமுத்து மறுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் இன்று காலை டீக்கடையில் புகுந்து மாரிமுத்துவை கத்தி , பாட்டில் உள்ளிட்டவைகளால் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர்.

    இதில் படுகாயமடைந்த மாரிமுத்துவை மீட்டு அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் மாரிமுத்து இறந்து விட்டார். மேலும் டீக்கடை அருகே இதில் சம்பந்தபட்ட இளைஞர்கள் கஞ்சாவும் விற்று வந்துள்ளதும் தெரியவந்தது.

    இது குறித்து போலீஸாரிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. கொலை குறித்தும் இதில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் குறித்தும் தல்லாகுளம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    கடனுக்கு டீ தர மறுத்த டீக்கடைக்காரரை கொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களின் கோபம் எந்தளவுக்கு செல்கிறது என்பதை உணர்த்தும் சம்பவங்கள் அண்மைகாலமாக நடைபெற்று வருகின்றன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+