கடனுக்கு டீ கொடுக்க மறுப்பு.. டீக்கடைக்காரர் படுகொலை.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்
Recommended Video
மதுரை: கடனுக்கு டீ கொடுக்க மறுத்த டீ கடை உரிமையாளரை ஆறு இளைஞர்கள் சேர்ந்து வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கிருஷ்ணாபுரக்காலணி பாரதி தெருவில் டீக்கடை நடத்தி வருபவர் மாரிமுத்து. இவர் டீக்கடையில் சில இளைஞர்கள் கடனுக்கு டீ கொடுக்க வற்புறுத்தி வந்துள்ளனர்.

அதற்கு மாரிமுத்து மறுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் இன்று காலை டீக்கடையில் புகுந்து மாரிமுத்துவை கத்தி , பாட்டில் உள்ளிட்டவைகளால் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர்.
இதில் படுகாயமடைந்த மாரிமுத்துவை மீட்டு அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் மாரிமுத்து இறந்து விட்டார். மேலும் டீக்கடை அருகே இதில் சம்பந்தபட்ட இளைஞர்கள் கஞ்சாவும் விற்று வந்துள்ளதும் தெரியவந்தது.
இது குறித்து போலீஸாரிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. கொலை குறித்தும் இதில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் குறித்தும் தல்லாகுளம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
கடனுக்கு டீ தர மறுத்த டீக்கடைக்காரரை கொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களின் கோபம் எந்தளவுக்கு செல்கிறது என்பதை உணர்த்தும் சம்பவங்கள் அண்மைகாலமாக நடைபெற்று வருகின்றன.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications