இவிஎம் இயந்திரங்கள் உள்ள இடத்தில்.. லேட்டாப்புடன் நுழைந்த 'அவர்கள்'... மதுரையில் திடீர் பரபரப்பு
மதுரை: வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மதுரை அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தினுள் லேப்டாப்புடன் சில பல்கலைக்கழக ஆசிரியர்கள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. வரும் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதையடுத்து வாக்கு இயந்திரங்கள் அணைத்தும் பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சீல் வைக்கப்பட்ட அறைகளில் பாதுகாக்கப்படுகிறது.

அத்துமீறி நுழைவதாகப் புகார்
இருப்பினும், பாதுகாப்பு அறைகளில் சிலர் அத்துமீறி நுழைவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்துள்ளன. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட கீழக்குயில்குடி பகுதியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் உசிலம்பட்டி மற்றும் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள.

லேப்டாப்புடன் நுழைந்த சிலர்
இந்நிலையில் இன்று மதியம் பல்கலைக்கழக வளாகத்தில் லேப்டாப்புடன் சிலர் புகுந்ததாக சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடேசனுக்கு அக்கட்சி தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடேசன் தனது ஆதரவாளர்களுடன் பல்கலைக்கழகத்திற்கு விரைந்து வந்து, சம்மந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு புகார் அளித்தார்.

யார் அவர்கள்
திமுக வேட்பாளர் புகார் அளித்ததன் அடிப்படையில் சோழவந்தான் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாடிப்பட்டி துணை காவல் கண்காணிப்பாளருடன் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விராசணையில் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப் பல்கலைக்கழக ஆசிரியர்களே லேப்டாப்புடன் சென்றுள்ளது தெரியவந்தது. மேலும், அவர்கள் தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையின் உரிய அனுமதி பெற்றிருந்ததும் தெரியவந்தது.

புகார் அளிக்கவுள்ளோம்
இருப்பினும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகத்திற்குள்ள வேட்பாளர்கள் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல் ஆசிரியர்களை உள்ளே அனுமதித்தற்கு மாவட்ட ஆட்சியரிடம் நாளை எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்கவுள்ளதாகவும் இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர உள்ளதாகவும் சோழவந்தான் தொகுதி வேட்பாளர் வெங்கடேசன் கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications