திருப்பரங்குன்றத்தில் மீண்டும் பரபரப்பு.. திடீர் போராட்டத்தில் குதித்த பாஜகவினர்.. கைது செய்த போலீஸ்
மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது ஏறுவோம் என்று கூறிய கோட்டை தெரு கிராம மக்களை போலீசார் கைது செய்தநிலையில் அவர்களை விடுதலை செய்யக்கோரி திருநகர் பேருந்து நிறுத்தம் அருகே பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மதுரை - திருப்பரங்குன்றம் சாலையில் இருபுறமும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
சுமார் 200 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

திருப்பரங்குன்றம் மலை மீது
மதுரை திருமங்கலம் பகுதியில் இன்று காலை திருப்பரங்குன்றம் மலை மீது ஏறுவோம் என்று கூறி கோட்டை தெரு பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் உள்ள மக்கள் திருப்பரங்குன்றம் மலை சந்தணக்கூடு நிகழ்வுக்காக மலை மீது ஏறினால், நாங்கள் திருப்பரங்குன்றம் கோவிலில் தீபம் ஏற்றுவோம்.. கொடி மரம் கொண்டு வரும் போது நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கோட்டை தெரு பகுதி மக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கைது செய்த போலீசார்
ஆண்கள், பெண்கள் என சுமார் 20 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து திருநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதையடுத்து பாஜக முன்னாள் தலைவர் ஹெச் ராஜா அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து மாலை 6 மணியளவில் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டு இருந்தது.
சாலை மறியல் போராட்டம்
ஆனால் மாலை 6 மணி ஆகியும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் திருமங்கலம் திருநகர் பகுதியில் இன்று இரவு 200-க்கும் மேற்பட்ட பாஜகவினர் குவிந்தனர். அவர்கள் கோட்டை தெரு பகுதி மக்களை உடனே விடுவிக்க வேண்டும் என்று அப்பகுதியில் பேரணி நடத்தினர். ஆனாலும் போலீசார் அவர்களை விடுவிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து மதுரை - திருமங்கலம் சாலையில் பாஜகவினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். திடீரென 200-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் மதுரை - திருமங்கலம் சாலையில் சுமார் 2 கிமீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
-
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
இறுதியான பாஜக வேட்பாளர்கள் பட்டியல்.. பியூஷ் கோயல் ஆலோசனையில் நடந்தது என்ன? அண்ணாமலைக்கு வாய்ப்பு? -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு












Click it and Unblock the Notifications