Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் பரபரப்பு.. திடீர் போராட்டத்தில் குதித்த பாஜகவினர்.. கைது செய்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது ஏறுவோம் என்று கூறிய கோட்டை தெரு கிராம மக்களை போலீசார் கைது செய்தநிலையில் அவர்களை விடுதலை செய்யக்கோரி திருநகர் பேருந்து நிறுத்தம் அருகே பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மதுரை - திருப்பரங்குன்றம் சாலையில் இருபுறமும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

சுமார் 200 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

tension-at-thirupparankundram-as-bjp-workers-launch-sudden-protest-police-make-arrests

திருப்பரங்குன்றம் மலை மீது

மதுரை திருமங்கலம் பகுதியில் இன்று காலை திருப்பரங்குன்றம் மலை மீது ஏறுவோம் என்று கூறி கோட்டை தெரு பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் உள்ள மக்கள் திருப்பரங்குன்றம் மலை சந்தணக்கூடு நிகழ்வுக்காக மலை மீது ஏறினால், நாங்கள் திருப்பரங்குன்றம் கோவிலில் தீபம் ஏற்றுவோம்.. கொடி மரம் கொண்டு வரும் போது நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கோட்டை தெரு பகுதி மக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கைது செய்த போலீசார்

ஆண்கள், பெண்கள் என சுமார் 20 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து திருநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதையடுத்து பாஜக முன்னாள் தலைவர் ஹெச் ராஜா அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து மாலை 6 மணியளவில் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டு இருந்தது.

சாலை மறியல் போராட்டம்

ஆனால் மாலை 6 மணி ஆகியும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் திருமங்கலம் திருநகர் பகுதியில் இன்று இரவு 200-க்கும் மேற்பட்ட பாஜகவினர் குவிந்தனர். அவர்கள் கோட்டை தெரு பகுதி மக்களை உடனே விடுவிக்க வேண்டும் என்று அப்பகுதியில் பேரணி நடத்தினர். ஆனாலும் போலீசார் அவர்களை விடுவிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து மதுரை - திருமங்கலம் சாலையில் பாஜகவினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். திடீரென 200-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் மதுரை - திருமங்கலம் சாலையில் சுமார் 2 கிமீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+