இறப்பிலும் 5 பேருக்கு மறுவாழ்வு அளித்த தேனி மாணவன்.. மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
மதுரை: தேனி மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவன் மூளைச்சாவு அடைந்த சோகத்திலும் கூட அவரது தந்தை உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக்கொண்டு 5 பேருக்கு மறுவாழ்வு அளித்த சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
நாம் இறந்த பிறகு நமது உடல் உறுப்புகள் மண்ணோடு மண்ணாக வீணாகிவிடும். இதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. மாறாக நமது உடல் உறுப்புகளை தானமாக கொடுத்தால் நாம் இறந்த பிறகும் கூட சிலர் மறுவாழ்வு பெற்று வாழ்வார்கள்.

இதனால் தான் ஒவ்வொருவரும் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. முன்காலத்தை விட தற்போது உடல் உறுப்பு தானம் செய்வது சற்று அதிகரித்து இருந்தாலும் கூட பலரும் இன்னும் தயக்கம் காட்டி தான் வருகின்றனர்.
இதற்கிடையே தான் தேனியில் மகன் மூளைச்சாவு அடைந்த துயரத்திலும் கூட அவரது தந்தை உடல் உறுப்புகளை தானமாக வழங்கி 5 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. அதாவது தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் பரத்குமார் (19). இவர் தேனி அருகே வீரபாண்டி சவுராஷ்ரா கல்லூரியில் பிபிஏ 2ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் தான் உத்தமபாளையம் அனுமந்தம்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது இருசக்கர வாகனமும், இன்னொரு இருசக்கர வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பரத்குமார் பலத்த காயமடைந்தார். தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் மூளைச்சாவு அடைந்தார். இதுபற்றி டாக்டர்கள் அவரது குடும்பத்தினரிடம் கூறினர்.
இதனை கேட்ட குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த வேளையில் பரத்குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்யலாம். இப்படி செய்வதன் மூலம் உங்கள் மகனின் உறுப்புகள் மூலம் மற்றவர்கள் வாழ்வார்கள் என டாக்டர்கள் பரத்குமாரின் தந்தை உள்பட குடும்பத்தினரிடம் எடுத்து கூறினர். இதனை கேட்ட பரத்குமாரின் தந்தை உடல் உறுப்பு தானம் செய்ய ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து பரத்குமாரின் இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்டவை அவரது உடலில் இருந்து தானமாக எடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த உறுப்புகள் சென்னை, தஞ்சாவூர், திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றவர்களுக்கு பொருத்தப்பட்டது. மேலும் மதுரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று ஒரு நோயாளியும் அவரால் மறுவாழ்வு பெற்றார். பரத்குமாரின் உடல் உறுப்பு தானத்தால் மொத்தம் 5 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications