சிஐஎஸ்எப் பாதுகாப்பு.. நீதிமன்றம் சட்டம் ஒழுங்கை கையில் எடுக்க கூடாது.. தமிழக அரசு முக்கிய வாதம்
மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடர்பாக தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்த தமிழக அரசு மேல்முறையீடு மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது சிஐஎஸ்எப் பாதுகாப்பு நீதிமன்றத்தை பாதுகாக்கவே என்றும், மனுதாரருக்கு அனுப்பியது ஏற்புடையதல்ல என்று திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழக அரசு வாதிட்டது. அதேபோல் காவல்துறைக்கு இணையாக சிஐஎஸ்எப் செயல்பட முடியாது என்று வாதிட்ட தமிழக அரசு, நீதிமன்றம் சட்டம் ஒழுங்கை கையில் எடுக்க கூடாது என்று தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றாததால் வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள், சிஐஎஸ்எப் பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு சென்று தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜிஆர்.சுவாமிநாதன் நேற்று மாலை உத்தரவிட்டார். இதனிடையே திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

அதேபோல் தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதனால் திருப்பரங்குன்றம் மலை வாயிலில் காவல்துறை vs சிஐஎஸ்எப் என்ற நிலை உருவாகியது. எவ்வளவு பேச்சுவார்த்தை நடத்தியும், சிஐஎஸ்எப் மற்றும் மனுதாரரை போலீசார் அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் தமிழக அரசின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடங்கியுள்ளது. அதில் தமிழக அரசு தரப்பில், சிஐஎஸ்எப் என்பது நீதிமன்றத்தை பாதுகாக்கவே.. மனுதாரருக்கு பாதுகாப்பாக அனுப்பியது ஏற்புடையது அல்ல.. அதேபோல் சிஐஎஸ்எப்-க்கு அதிகாரம் நீதிமன்ற எல்லைக்குள் மட்டுமே.. அதனைத்தாண்டி கிடையாது. சட்டத்தை மீறி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மனுதாரரின் மறைமுக உள்நோக்கம் என்னவென்று தெரியாது. நீதிமன்ற உத்தரவை வைத்துக் கொண்டு மனுதாரர் தரப்பு திருப்பரங்குன்றத்தில் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில்தான் இருக்க வேண்டும். உயர்நீதிமன்ற பாதுகாப்புக்கு வந்தவர்களை சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்கு அனுப்ப முடியாது.
காவல்துறைக்கு இணையாக சிஐஎஸ்எப் செயல்பட முடியாது. தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவு தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கியது. நீதிமன்றம் சட்டம் ஒழுங்கை கையில் எடுக்க கூடாது என்றும் தமிழக அரசு வாதிட்டு வருகிறது.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications