"அரோகரா" கோஷம் போடலாம்.. ஆனால் போலீசாரை தாக்கலாமா! தமிழக அரசு வைத்த மிக முக்கியமான வாதம்
மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஐகோர்ட் மதுரை கிளையில் பல்வேறு காரசார விவாதங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்.. திருப்பரங்குன்றம் விவகாரம் தமிழ்நாடு முழுக்க பெரும் பிரச்சனையாகிப் பரபரப்பாகி இருப்பதாகத் தமிழக அரசு வாதத்தை முன்வைத்துள்ளது. மேலும், அரோகரா கோஷம் போடலாம்.. ஆனால் போலீசாரை தாக்கலாமா என்றும் தமிழக அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான நேற்று திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இருப்பினும் இந்தக் கார்த்திகை தீபத்தை உச்சி பிள்ளையார் கோயிலுக்குப் பதிலாக மலை உச்சியில் உள்ள கார்த்திகை மகா தீபத்தூணில் ஏற்ற வேண்டும் எனச் சொல்லி சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

ஐகோர்ட் மதுரை கிளை
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை உச்சியில் தீபத்தை ஏற்ற உத்தரவிட்டார். இருப்பினும், உச்சி பிள்ளையார் கோயிலிலேயே தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. அந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் உதவியுடன் மலை உச்சியில் அமைந்துள்ள உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டார்.
மேல்முறையீடு தள்ளுபடி
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட் மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அப்போது பல்வேறு காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டது. மேலும், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேல்முறையீட்டு மனு ரத்து செய்யப்பட்ட நிலையில், மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை ஜிஆர் சுவாமிநாதன் விசாரணைக்கு எடுத்தார். நேற்றைய தினம் இந்த வழக்கில் தான் மனுதாரரே மலையின் மீது ஏறி தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டிருந்தார்.
பரபரப்பான சூழல்
விசாரணை தொடங்கிய போது, திருப்பரங்குன்றம் விவகாரம் தமிழ்நாடு முழுக்க பெரும் பிரச்சனையாகிப் பரபரப்பாகி இருப்பதாக வாதத்தை முன்வைத்தார். எனவே, பிரதான வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்த பிறகு.. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்குமாறு தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். மேலும், அரோகரா கோஷம் போடலாம்.. ஆனால் போலீசாரை தாக்கலாமா என்றும் தமிழக அரசு வாதத்தை முன்வைத்தது
இருப்பினும், இதை ஏற்க மறுத்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், தமிழகத்தில் அப்படி எந்தவொரு பதற்றம் அல்லது பரபரப்பு இல்லை என்றார். மேலும், இந்தத் தீர்ப்பால் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் இல்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.
டைம் கேட்ட தமிழக அரசு
அப்போது இதுபோன்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் வழக்கமாக 4 வாரக் கால அவகாசம் தரப்படும் எனத் தமிழக அரசு வாதத்தை முன்வைத்தது. அதற்கு, 4 வாரங்கள் கால அவகாசம் கொடுத்தால் மட்டும் என்ன செய்யப் போகிறீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்குச் சட்டப்படி தேவையான விளக்கங்களைக் கொடுப்போம் எனத் தமிழக அரசுத் தரப்பில் தெரிவித்தனர்.
மேலும், மலை உச்சியில் தீபத்தை ஏற்ற சொல்லி உத்தரவிட்ட பிரதான வழக்கிலும் தமிழக அரசு தனியாக மேல்முறையீடு செய்திருந்தது. அந்த மேல்முறையீட்டு நாளை விசாரணைக்கு வரும் நிலையில், அதுவரை எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
நாளை மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.. தலைமை ஹாஜி அறிவிப்பு! -
18 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. இடி,மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
முடியல.. கொளுத்துது வெயில்! வெளியே போகாதீங்க! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications