ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை டைடல் பார்க் கட்டுமானப் பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் நடைபெறாமல், மிகவும் மந்தமான நிலையில் நகர்ந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட இலக்குகளைத் தாண்டியும் பணிகள் இழுபறியாக நீடிப்பது, தென் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பைத் தொடர்ந்து, மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் இந்த ஐடி பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டம் ஆரம்பத்தில் 2026 ஜனவரிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

TIDEL Park

ஆனால், திட்டத்தின் சுற்றுச்சூழல் அனுமதி, நிலம் எடுப்பது மற்றும் டெண்டர் நடைமுறைகளில் ஏற்பட்ட தொடர் காலதாமதங்களால் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் தொடங்க காலதாமதமானது. சமீபத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு, பணிகள் வரும் ஜூன் அல்லது ஜூலை 2026-க்குள் நிறைவடையும் எனத் தொழில்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போதைய கள நிலவரப்படி அதற்குள்ளும் பணிகள் முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. சுமார் ரூ.289 கோடி மதிப்பீட்டில், தரைத்தளம் மற்றும் 12 அடுக்குகளுடன் 5.67 லட்சம் சதுர அடியில் அமையவுள்ள இந்த அதிநவீன ஐடி பூங்கா பயன்பாட்டிற்கு வந்தால், மதுரையைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5,500 இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

1,000க்கும் மேற்பட்டோருக்கு மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும். ஆனால், திட்டத்தின் தற்போதைய ஆமை வேக நகர்வால் இந்த வேலைவாய்ப்புகள் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கின்றன. ஆரம்பகட்ட நிர்வாக நடைமுறைகள், சுற்றுச்சூழல் அனுமதிகள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் சென்னை, கோவைக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் மதுரைக்குக் கிடைக்காததே காரணம் எனக் குற்றம் சாட்டப்படுகிறது.

தற்போது வரை 4 அடுக்குகள் வரை மட்டுமே டைடல் பார்க் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. கடைசியாக ஜனவரி மாதத்தில் அமைச்சராக இருந்த போது டிஆர்பி ராஜா ஆய்வு மேற்கொண்டிருந்தார். அதன்பின் தேர்தல் நேரத்தில் இருந்தே டைடல் பார்க் பணிகள் சுணக்கம் அடைந்தன. கடந்த 3 மாதங்களாகவே டைடல் பார்க் கட்டுமான பணிகளில் எந்த முன்னேற்றமும் அடையவில்லை.

இதனால் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா உடனடியாக மதுரை தொழில் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற பேச்சுகள் தொடங்கியுள்ளன. தவெக ஆட்சி அமைத்தால் மதுரைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று விஜய் அறிவித்திருந்த நிலையில், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் டைடல் பார்க் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+