+2 பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவிக்கு நேர்ந்த சோகம்.. முதல் தேர்வு அன்றே சாலை விபத்தில் பலி!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் +2 பொதுத்தேர்வு எழுத உறவினருடன் பைக்கில் சென்ற மாணவி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தபோது அரசுப் பேருந்து மோதியதில் படுகாயமடைந்த மாணவி துர்கா தேவி (17) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த கல்வி ஆண்டுக்​கான பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்​கி உள்ளது. தமிழகம் முழுவதும் 3,412 மையங்​களில் 8 லட்​சம் மாணவ, மாணவி​கள், 27,783 தனித் தேர்​வர்​கள், 281 கைதி​கள் என மொத்​தம் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் தேர்வு எழுதுகின்​றனர்.

student died in accident

முதல் நாளான இன்று தமிழ் மற்​றும் இதர மொழித்​தாள் தேர்​வு​கள் நடைபெற்று வருகின்​றன. +2 பொதுத் தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. மதி​யம் 1.15 மணிக்கு முடிவடை​கிறது. வரும் மார்ச் 26 ஆம் தேதி வரை தேர்​வு​கள் நடை​பெறுகிறது. தேர்வு கண்​காணிப்பு பணி​யில் 44,624 ஆசிரியர்​கள் ஈடுபடு​கின்​றனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் அல்லிக் குளத்தில் பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிளஸ் 2 பொது தேர்வு எழுத மாணவி துர்கா தேவி (17) உறவினருடன் பைக்கில் சென்ற போது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மாணவி துர்கா தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தொடர்ந்து துர்கா தேவியின் உடல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். +2 பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவி விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+