மோடிக்கு எதிரான போராட்டம்.. மதிமுகவினரை கைது செய்ய முயன்ற போலீஸ்.. வைகோ எச்சரிக்கை!
பிரதமர் மோடிக்கு எதிராக மதுரையில் போராடிய மதிமுகவினரை கைது செய்ய முயன்ற போலீசாருடன் வைகோ வாக்குவாதம் செய்தது பெரிய வைரலாகி உள்ளது.
மதுரை: பிரதமர் மோடிக்கு எதிராக மதுரையில் போராடிய மதிமுகவினரை கைது செய்ய முயன்ற போலீசாருடன் வைகோ வாக்குவாதம் செய்தது பெரிய வைரலாகி உள்ளது.
பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் போராட்டம் நடந்து வருகிறது. மதிமுக சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போராட்டத்தில் ஈடுபட்டார். அதேபோல் தமிழ்நாடு பெரியார் திராவிட கழகம், பெரியாரிய அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.
மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களை வைகோ பறக்கவிட்டார். வைகோ தலைமையில் கருப்புக் கொடி ஏந்தி பலர் போராட்டம் நடத்தினார்கள்.
இந்த நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. போலீசாருக்கும் மதிமுகவினருக்கு இடையே பெரிய தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதன்பின் போலீசார் மதிமுகவினரை போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். 50 பேர் வரை போலீசார் வாகனத்தில் ஏற்றப்பட்டனர். ஆனால் வைகோ அவர்களை இறக்கிவிடுமநாறு போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். உடனே அவர்களை இறக்கிவிடுங்கள் என்று அவர் போலீஸுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இதன் பின்னர் போலீசார் அவர்களை இறக்கிவிட்டனர். இதையடுத்து மதிமுகவினர் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.