"அந்த" இடத்தில் என் புருஷனை அடித்தே கொன்றேன்.. ஓவர் தொல்லை".. மதுரைக்கே ஷாக் தந்த டீச்சர்!
பாலியல் தொல்லை தந்த கணவனை அடித்து கொன்ற மனைவி கைதானார்
மதுரை: எப்ப பார்த்தாலும் பாலியல் தொல்லையை ஓவராக தந்ததால், கட்டின புருஷனை அடித்தே கொன்றுவிட்டார் மனைவி.. அவரிடம் மதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தர்.. இவருக்கு சுதீர் என்ற இன்னொரு பெயரும் உண்டு.. 39 வயதாகிறது.. இவருடைய மனைவி அருள்செல்வி.. இவருக்கு வயது 31 ஆகிறது.. கல்யாணம் ஆகி 8 வருஷங்கள் ஆகின்றன... ஜெயஸ்ரீ என்ற 5 வயது மகள் இருக்கிறாள்.
தம்பதி இருவருமே வேலை பார்த்து வந்துள்ளனர்.. மதுரை கலெக்டர் ஆபிசில் தற்காலிகமாக ஊழியராக சுந்தர் இருந்துள்ளார்.. கீழ்செம்பட்டியில் உள்ள பிரைவேட் பள்ளியில் அருள்செல்வி, டீச்சராக வேலை பார்த்து வருகிறார்.

மதுபழக்கம்
சுந்தருக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.. இதனாலேயே தம்பதிக்குள் அடிக்கடி தகராறும் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.. இந்நிலையில், நேற்று முன்தினம் விடிகாலை, சுந்தர் திடீரென கட்டிலில் இருந்து மயங்கி கீழே விழுந்துவிட்டாராம். அதனால் அவரை குடும்பத்தினர் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

போஸ்ட் மார்ட்டம்
அங்கு சுந்தரை டாக்டர்கள் டெஸ்ட் செய்தபோது, அவரது உயிர் தளத்தில் ரத்தம் இருந்திருக்கிறது.. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தந்தனர். விரைந்து வந்த திருமங்கலம் போலீசார், சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. அந்த ரிப்போர்ட் வந்தால்தான் சுந்தர் இறப்பு குறித்து முழுமையாக தெரியவரும்.

வாக்குமூலம்
இதனிடையே, போலீசார் விசாரணையை தொடங்கினர்.. அருள்செல்வியைதான் முதல் விசாரணை.. எடுத்த எடுப்பிலேயே போலீசாரிடம் எல்லாவற்றையும் கக்கிவிட்டார்.. "தினமும் அவர் தண்ணி அடிச்சுட்டுதான் வருவார்.. போதையில் செக்ஸ் டார்ச்சர் தருவார்.. ஒருகட்டத்தில் செக்ஸ் வன்முறையிலும் ஈடுபட்டுவிட்டார்.

3 பேர் கைது
சம்பவத்தன்றும் அப்படித்தான் தொல்லை தந்தார்.. என் மகள் முன்பே உறவுக்கு கூப்பிட்டு அராஜகம் செய்தார்.. இதில்தான் வெறுப்படைந்து அடித்து கொன்றுவிட்டேன்.. இந்த கொலைக்கு என்னுடைய சித்தி பாலாமணி, - அவர் மகன் சுமேர் 2 பேரும் உதவி செஞ்சாங்க" என்றார். இதையடுத்து அவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.. தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications