முட்டி போட்டபடியே.. பெட்ரூமில் ஜன்னல் கம்பியில் தொங்கிய மகாலட்சுமி.. ஒரே மர்மம்.. மதுரையில் பரபரப்பு
பெண் போலீஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
மதுரை: ஜன்னல் கம்பியில் கயிறு கட்டி, தூக்கு போட்டு தொங்கி உள்ளார் ஒரு பெண் போலீஸ்.. முட்டி போட்டபடியே சடலமாக கிடந்துள்ளார்.. இது பல்வேறு சந்தேகங்களை கிளப்பி விட்டு வருகிறது.. மதுரை போலீசார் விசாரணையை கையில் எடுத்து உள்ளனர்..!
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள கஞ்சம்பமடியை சேர்ந்தவர் மகாலட்சுமி.. 25 வயதாகிறது.. கடந்த 2018-முதல், கோவை மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீசாக வேலை பார்த்து வந்தார்...
இதற்காக அவர் கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள போலீஸ் குவார்ட்டஸில் தங்கியிருந்து, அங்கிருந்தே வேலைக்கு போய் வந்தார்.
சென்னையில் பதுங்கல்?.. போலீஸ் தேடும் நிலையில் முன்ஜாமீன் கோரி மணிகண்டன் ஹைகோர்ட்டில் மனு
காதலன்
இந்நிலையில், மகாலட்சுமி ஒருவரை விரும்பினார்.. அவரும் போலீஸ்தான்.. திருநெல்வேலியை சேர்ந்தவர்.. இருவரின் நெருக்கமும் அதிகமானது.. இந்நிலையில், நேற்று முன்தினம், மகாலஷ்மிக்கு போன் செய்துள்ளார் அவரது காதலன்.. செல்போன் ரிங் போகிறது.. ஆனால், எடுக்கவில்லை.
அலறல்
அதனால் திரும்ப திரும்ப போனில் அழைத்து பார்த்தும், பதில் இல்லை என்பதால், சந்தேகமடைந்த அவர் மகாலட்சுமி தங்கியிருந்த குவார்ட்டஸுக்கே சென்று பார்த்தார்.. அப்போதுதான், அந்த குவார்ட்டஸ் வீட்டின் ஜன்னலில் கயிற்றை கட்டி, மகாலட்சுமி சடலமாக கிடந்ததை கண்டு அலறினார்..
ஆஸ்பத்திரி
இதையடுத்து, போலீசாருக்கு தகவல் சொல்லப்படவும், அவர்கள் விரைந்து வந்து, மகாலட்சுமியின் சடலத்தை மீட்டனர்.. போஸ்ட் மார்ட்டத்துக்கு அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். இதனிடையே, மகாலட்சுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் தந்துள்ளனர்..
மகாலட்சுமி
அவர்கள் மகாலட்சுமி பற்றி சொல்லும்போது, "இறந்தது ஒரு பெண் போலீஸ்.. தற்கொலை செய்து கொள்ள கூடியவர் கிடையாது.. தைரியமான பெண்... மகாலஷ்மி ஒருத்தரை காதலித்து வந்தது எங்களுக்கு தெரியும்.. இந்த காதலை நாங்கள் ஏற்றுக் கொண்டோம்.. ஆனால், அந்த காதலன் வீட்டில் கல்யாணத்துக்கு சம்மதிக்கவில்லை.. கல்யாண பேச்சுவார்த்தைகூட பாதியிலேயே நின்றுவிட்டது.. அதனால், மகாலட்சுமி மரணத்தை முறையாக விசாரிக்க வேண்டும் என்று கதறி அழுது கூறுகிறார்கள்.
சந்தேகம்
அதுமட்டுமல்லாமல், ஜன்னலில் தூக்கு போட்டுள்ளதால், மகாலஷ்மி முட்டி போட்டபடியே கிடந்துள்ளார்.. இதுவும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.. ஜன்னல் கம்பியில் கயிறு மாட்டி கொண்டு, தரையில் உட்கார்ந்து எப்படி தொங்க முடியும்? என்ற சந்தேகமும் எழுகிறது..
சடலம்
மகாலட்சுமி சடலமாகவே கிடந்ததால், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்தும் விசாரணையை போலீசார் கையில் எடுத்துள்ளனர்.. இந்த வழக்கில், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் எதுவும் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. பெண் போலீஸ் ஒருவர், பூட்டிய ரூமுக்குள் பிணமாக கிடந்த சம்பவம் காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.