படபடவென சரிந்த படிக்கட்டுகள்.. இடிபாடுகளில் சிக்கி தொழிலாளி பலி.. 2 பேர் படுகாயம்.. மதுரையில் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை விளாங்குடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

மதுரை விளாங்குடி பகுதியில் சொக்கநாதபுரம் 1வது தெருவில் புதிய வீடு கட்டுமான பணி நடைபெற்று வந்தது. இந்தப் பணியின்போது எதிர்பாராவிதமாக வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், 3 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.

Worker died and 2 injured in madurai due to building collapsed suddenly

கட்டுமான பணியின் போது படிக்கட்டு இடிந்து விழுந்த விபத்தில் அதற்கு கீழே வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளிகள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இதில் ஒரு பெண் தொழிலாளி உயிரிழந்துள்ளார். மேலும், கட்டிட இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 2 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள், போலீசார் ஈடுபட்டனர்.

மீட்கப்பட்ட 2 தொழிலாளிகள் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+