மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இரவில் பதுங்கிய போதை இளைஞர்! விடிந்ததும் நடந்த ட்விஸ்ட்! என்ன பாருங்க
மதுரை: உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இரவு முழுவதும் குடிபோதையில் இளைஞர் ஒருவர் பதுங்கியிருந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உலக பிரசித்தி பெற்றதாகும். ஏறத்தாழ 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் இந்த கோயிலில் வரலாற்று சிறப்பு மிக்க சிற்பங்கள், கல்வெட்டுக்கள், கலை பொருட்கள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்த தலைமுறையினருக்கு பத்திரமாக கொண்டு சேர்க்கும் பொறுப்பு இருப்பதாலும், கோயிலுக்குள் இருக்கும் ஆபரணங்களை பாதுகாக்கவும் இக்கோயிலுக்கு காவல்துறை பலத்த பாதுகாப்பை வழங்கி வருகிறது.

இக்கோயில் தினமும் காலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு 5 மணிக்கு அம்மன் சன்னதி வாசலில் உள்ள சித்தி விநாயகர், முருகனுக்கு பூஜை செய்யப்படுகிறது. அதேபோல இரவு 9.15 வரை அம்மனை தரிசிக்க முடியும். அதன் பின்னர் பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் இருக்க அனுமதி கிடையாது. மட்டுமல்லாது கோயிலுக்குள் லைட்டர், செல்போன், தீப்பெட்டி, கத்தி போன்ற கூர்மையான பொருட்கள் என ஆபத்தை விளைவிக்கும் பொருட்கள் கொண்டு செல்ல தடை இருக்கிறது.
இப்படி இருக்கையில் ஓர் இரவு முழுவதும் கோயிலுக்குள் இளைஞர் ஒருவர் தங்கியிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மீனாட்சி அம்மன் கோயிலின் வடக்கு கோபுரம் வழியாக நேற்று இரவு சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் என்ற இளைஞர் மது போதையில் உள்ளே நுழைந்துள்ளார்.
பின்னர் கோவிலுக்குள் உள்ள விபூதி விநாயகர் சிலை அருகிலேயே படுத்து உறங்கியுள்ளார். இதனையடுத்து இரவு கோயில் நடை சாத்தப்பட்டு கதவுகள் மூடப்பட்ட நிலையிலும் மதுபோதையில் இருந்த வினோத்தை யாரும் கவனிக்காமல் சென்றுள்ளனர். தெளிந்து அதிகாலை 3 மணிக்கு எழுந்து பார்த்தபொழுது கோயில் கதவுகள் பூட்டப்பட்டிருப்பதை தொடர்ந்து வினோத் வடக்கு கோபுரம் கதவை தட்டியுள்ளார். கோயில் உள்ளே இருந்து கதவை தட்டும் சத்தம் கேட்ட உடனே போலீசார் கதவை திறந்து அவரை பிடித்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட வினோத் சில ஆண்டுகளுக்கு முன்பு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்பொழுது அதனை விட்டுவிட்டு பல்வேறு பகுதிகளிலும் மதுபோதையில் சுற்றி திரிவது தெரியவந்தது. இந்நிலையில் பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மதுபோதையில் சென்று படுத்து உறங்கியதும் தெரியவந்துள்ளது.
இதுபோன்று மதுபோதையில் இருந்த நபரை எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்தும் அவரின் நடமாட்டம் குறித்தும் கோவிலில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களை மீனாட்சியம்மன் கோவில் காவல்துறையினர் ஆய்வு செய்ய தொடங்கினர்.மேலும் நேற்று மாலை பாதுகாப்பு பணியில் அலட்சியமாக இருந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதனையடுத்து வினோத்திடம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் , தமிழக உளவுத்துறை காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் வினோத் ஒரு மனநோயாளி என்பது தெரிய வந்திருக்கிறது. வீட்டில் சண்டை போட்டுவிட்டு கோவித்துக்கொண்டு அவர் கோயிலுக்குள் வந்திருக்கிறார். எனவே போலீசார் அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர். அதேபோல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். மது போதையில் விடிய விடிய கோயிலுக்குள் ஒருவர் தூங்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications