மகாராஷ்டிரா.. கட்சிரோலியில் பாதுகாப்பு படை என்கவுண்டர்.. 13 மாவோயிஸ்டுகள் இன்று சுட்டுக்கொலை!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் இயங்கி வந்த 13 மாவோயிஸ்டுகள் இன்று சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய என்கவுண்டரில் 13 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று சி 60 கமாண்டோ படை மூலம் சோதனை நடத்தப்பட்டது. இந்த படை மாவோயிஸ்ட் அமைப்புகளுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் உருவாக்கப்பட்டு இருக்கும் போலீஸ் சிறப்பு படையாகும்.
மாவோயிஸ்ட் பதுங்கி இருப்பது குறித்து கிடைத்த உளவு தகவல் மூலம் இவர்கள் கட்சிரோலி மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களிலும், காடுகளிலும் சோதனை நடத்தினார்கள்.
இதழ் பயாடி - கோதமி காட்டு பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற சி 60 கமாண்டோ படை அங்கு என்கவுண்டர் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 13 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
பணம் கேட்டு மிரட்டல்… தமிழக-கேரள எல்லையில் மாவோயிஸ்டு சுட்டுக் கொலை
இதில் சிலரை போலீசார் நீண்ட காலமாக தேடி வந்தது. அதோடு சிலரை பிடித்து கொடுத்தால் பரிசு கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சிலர் கொடுத்த "துப்பு" தகவல் மூலம் இந்த 13 மாவோயிஸ்டுகள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டு என்கவுண்டர் நடந்துள்ளது.