மும்பையிலிருந்து விழுப்புரத்திற்கு சிறப்பு ரயில் மூலம் வந்த 1400 பயணிகள்
மும்பை: மகாராஷ்டிராவிலிருந்து 1400 பேர் சிறப்பு ரயில் மூலம் தமிழகத்திற்கு ரயில் மூலம் வந்துள்ளனர்.
கொரோனா லாக்டவுனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் பாதிப்பை சந்தித்துள்ளார்கள். இதிலும் வேலையில்லாமல் பிழைப்பு தேடி மற்ற மாநிலங்களுக்கு சென்றோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதுபோல் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் சிக்கித் தவித்து வரும் மக்களை அந்தந்த அரசுகள் மீட்டு வருகிறார்கள். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்க விமானங்கள் மற்றும் கப்பல்கள் அனுப்பப்படுகின்றனர்.
அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் தமிழகத்தில் 1400-க்கும் மேற்பட்டோர் சிறப்பு ரயில் மூலம் விழுப்புரம் வந்து சேர்ந்தனர். அவர்களை விழுப்புரம் ரயில் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இந்தியாவுடன் இணைய போராடப் போகும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள்: ராஜ்நாத்சிங்
இதையடுத்து உடல்வெப்ப பரிசோதனைக்கு பிறகு சிறப்பு பேருந்துகள் மூலம் அனைவரும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.