மழையால் உடைந்த அணை.. தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மக்கள்.. 16 பேர் உடல் மீட்பு! மகாராஷ்டிரா சோகம்
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் ரத்னகிரி அணை உடைந்த விபத்தில் நீரால் இழுத்துச் செல்லப்பட்டவர்களில் இதுவரை 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கொட்டி வருகிறது. மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த பல நாட்களாக ஊற்று ஊற்றென ஊற்றித் தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

கனமழை காரணமாக நீர்நிலைகள், அணைக்கட்டுகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதேபோல, ரத்னகிரி பகுதியில் உள்ள திவாரே அணை வேகமாக நிரம்பி வந்தது. நேற்று முன்தினம் திடீரென அணையின் ஒரு பகுதி உடைந்து தண்ணீர் குபுகுபுவென வெளியேறியது.
இதனால் அணையின் அருகிலுள்ள வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அந்த வீடுகளில் இருந்தவர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
மேலும், அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள 7 கிராமங்களை சூழ்ந்துள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில், இதுவரை 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், மாயமான 8 பேரை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா நீர்வளத்துறை அமைச்சர் கிரிஷ் மகாஜன் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார், முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்த விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா, ரூ .4 லட்சம் நிதி உதவி அறிவித்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எஃப்) மற்றும் மாநில காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருவதாக, ரத்னகிரி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஷால் கெய்க்வாட் தெரிவித்தார். "போலீசார் கிராம மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வைத்துள்ளனர். இப்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது," என்று அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications