கையில் என்ன.. இவ்வளவு கோடியா? மும்பை ஏர்போர்ட்டில் ஹர்திக் பாண்டியாவை வளைத்த கஸ்டம்ஸ்? என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பை ஏர்போர்ட்டில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் மூலம் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா கடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார். இவர் வாங்கிய இரண்டு புதிய வாட்ச்கள்தான் இந்த சர்ச்சைக்கு காரணம்.

Recommended Video

    Hardik Pandyaவை வளைத்த Customs? Mumbai Airportடில் என்ன நடந்தது? | OneIndia Tamil

    2021 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா சரியாக ஆடவில்லை. அதன்பின் நடந்த 2021 டி 20 உலகக் கோப்பை தொடரிலும் ஹர்திக் பாண்டியா சரியாக ஆடவில்லை.

    இவரின் காலில் ஒன்றரை வருடத்திற்கு முன் செய்த ஆபரேஷனுக்கு பின் பவுலிங் போடுவதை நிறுத்திவிட்டார். இதனால் இந்திய அணிக்கும் இவர் பவுலிங் போடுவது கிடையாது.

    பேட்டிங்

    பேட்டிங்

    இவரின் பேட்டிங்கிலும் பார்ம் இல்லை. இதனால் உலகக் கோப்பை தொடரின் போதே ஹர்திக் பாண்டியாவை எடுக்க கூடாது என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. ஆனால் அதையும் மீறி ஹர்திக் பாண்டியாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அனைத்து போட்டியிலும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைத்தும் கூட ஹர்திக் பாண்டியா சரியாக ஆடவில்லை.

     இந்திய அணி வெளியேற்றம்

    இந்திய அணி வெளியேற்றம்

    அதோடு இந்திய அணியும் முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிராக வீழ்ந்தது. இதனால் இந்திய அணி செமி பைனல் செல்லும் வாய்ப்பை இழந்தது. இதையடுத்து தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி 20, டெஸ்ட் தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா புறக்கணிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    வாய்ப்பு

    வாய்ப்பு

    இந்த நிலையில் மும்பை ஏர்போர்ட்டில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் மூலம் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா கடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார். இவரிடம் இரண்டு வாட்ச் இருந்துள்ளது. இரண்டும் புதிய வாட்ச் ஆகும். அதை ஒன்றை கையில் கட்டி இருந்துள்ளார். இன்னொன்று அவரின் கை பையில் இருந்துள்ளது. இதன் இரண்டின் மதிப்பு ரூபாய் 1.5 கோடியாகும்.

    அதிகாரிகள்

    அதிகாரிகள்

    இதை பார்த்ததும், இவ்வளவு கோடி மதிப்புள்ள பொருட்களை துபாயில் இருந்து வாங்கி வர பில் தேவை. இதன் மதிப்பு மிக அதிகம். பில் எங்கே என்று கேட்டுள்ளனர். ஆனால் ஹர்திக் பாண்டியா தன்னுடைய விளக்கத்தில் சுயமாக சென்று இவர் அதிகாரிகளை சந்தித்து வாட்ச்களை கொடுத்ததாக கூறியுள்ளார். அதே சமயம் ஹர்திக் பாண்டியாவிடம் இதற்கான சில ஆவணங்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் கூடுதல் இறக்குமதி வரி கட்ட வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    இதையடுத்து அவரின் வாட்ச் இரண்டும் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு அவரிடம் தீவிர சோதனை செய்யட்டது. இவர் கூடுதல் இறக்குமதி வரி கட்டி சில ஆவணங்களை கொடுத்த பின் வாட்ச் திருப்பி அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+