பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க 45 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ரெடியாம்.. பாஜக எம்பி சஞ்சய் காகடே
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க 45 சிவசேனா எம்.எல்.ஏக்கள் தயாராக உள்ளதாக பாஜக ராஜ்யசபா எம்.பி. சஞ்சய் காகடே தெரிவித்துள்ளது அம்மாநில அரசியலில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக 105, சிவசேனா 56 இடங்களின் வென்றன. தேர்தலுக்கு முன்னரே இரு கட்சிகளும் தொகுதிகள் மற்றும் அதிகாரத்தை சரிசமமாக பங்கிடுவது என முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் சட்டசபை தேர்தலின் போது பாஜக கூடுதல் தொகுதிகளில் போட்டியிட்டது சிவசேனாவை அதிருப்தி அடைய வைத்தது. இந்நிலையில் சிவசேனா ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க இருக்கிறது.
சிவசேனாவோ, அதிகாரத்தை சரி சமமாக பகிர வேண்டும் என நிபந்தனை விதித்திருக்கிறது. சுழற்சி முறையில் முதல்வர் பதவி அல்லது முக்கிய அமைச்சரவை பதவிகள் வழங்க வேண்டும் என்பதில் சிவசேனா உறுதியாக இருக்கிறது.
இதனால் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி இருந்து வருகிறது. இந்நிலையில் பாஜகவின் ராஜ்யசபா எம்பியாக சஞ்சய் காகடே, டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில், 56 சிவசேனா எம்.எல்.ஏ.க்களில் 45 பேர் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கவே விரும்புகின்றனர். அந்த 45 எம்.எல்.ஏக்கள் எங்களை அழைத்து அரசில் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டு வருகின்றனர் என கூறியிருந்தார்.
அவரது இந்த பேட்டி மகாராஷ்டிரா அரசியலில் கூடுதல் பரபரப்பை கிளப்பியது. இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சஞ்சய் காகடே, சிவசேனாவின் 45 எம்.எல்.ஏக்கள் பாஜக, சிவசேனா இணைந்து ஆட்சி அமைக்கவே விரும்புவதாக தாம் கூறியதாக விளக்கம் அளித்திருக்கிறார்.
-
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு












Click it and Unblock the Notifications