80 வயது தாத்தாவுக்கு பெண் அனுப்பிய பிரண்ட் ரெக்வஸ்ட்! அடுத்து மாயமான 9 கோடி.. இந்த தப்பை செய்யாதீங்க
மும்பை: 80 வயதான முதியவர் ஒருவருக்கு பேஸ்புக்கில் பெண் கணக்கில் இருந்து பிரண்ட் ரெக்வஸ்ட் வந்துள்ளது. அந்த பிரண்ட் ரெக்வஸ்ட்டை அந்த முதியவர் ஏற்ற நிலையில், அதன் பிறகு சினிமாவை மிஞ்சும் அளவுக்குப் பல பகீர் திருப்பங்கள் நடந்துள்ளது. அந்த முதியவர் மொத்தம் ரூ.9 கோடியை இந்த சைபர் மோசடியில் இழந்தது தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காலகட்டத்தில் சைபர் மோசடிகள் என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக வயதானோரைக் குறிவைத்தே இதுபோன்ற சைபர் மோசடிகள் அதிகம் நடக்கிறது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் மும்பையில் நடந்துள்ளது. மும்பையில் 80 வயது முதியவர் ஒருவர், சைப்ரக்ரைம் கும்பலிடம் ₹9 கோடிக்கு மேல் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் இரண்டு ஆண்டுகள் இந்த மோசடி அரங்கேறியுள்ளது. அந்த முதியவரிடம் இருந்து ஆசை வார்த்தைகள் கூறி 734 ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் 9 கோடி ரூபாயை இந்த கும்பல் மோசடி செய்துள்ளது.
சைபர் மோசடி
இது எல்லாம் கடந்த 2023ம் ஆண்டு தான் தொடங்கியுள்ளது. 2023 ஏப்ரல் மாதம் அந்த முதியவர் ஃபேஸ்புக்கில் ஷார்வி என்ற பெண்ணுக்கு பிரண்ட் ரெக்வஸ்ட் அனுப்பியுள்ளார். இருவருக்கும் முன்பின் தெரியாதாம். இருந்தாலும் அந்த பெண்ணுக்கு பிரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்துள்ளார். ஆனால், அந்த பிரண்ட் ரெக்வஸ்ட் முதலில் ஏற்கப்படவில்லை.
பணம் பறிப்பு
அதன் பிறகு கொஞ்ச நாட்கள் கழித்து ஷார்வி கணக்கில் இருந்தே அந்த முதியவருக்கு பிரண்ட் ரெக்வஸ்ட் வந்துள்ளது. அதை அவர் ஏற்றுள்ளார். இருவரும் முதலில் பேஸ்புக் தளத்தில் பேச ஆரம்பித்துள்ளனர். முதலில் இருவரும் பேஸ்புக்கில் சாட் செய்த நிலையில், பிறகு நம்பரையும் மாற்றிக் கொண்டனர்.. பிறகு இருவரும் வாட்ஸ்அப்பில் சாட் செய்துள்ளார். கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் பிள்ளைகளுடன் வசிப்பதாகவும் ஷார்வி அந்த முதியவரிடம் தெரிவித்தார். நாளடைவில், தனது குழந்தைகள் உடல்நலமில்லாமல் இருப்பதாகக் கூறி, பணம் கேட்கத் தொடங்கினார்.
அடுத்த பெண்
இது ஒரு பக்கம் இருக்க சில நாட்களில் கவிதா என்ற மற்றொரு பெண் முதியவருக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பத் தொடங்கினார். தான் ஷார்விக்கு தெரிந்தவர் என்றும் பிரண்டாக இருக்க விரும்புவதாகச் சொல்லி அந்த தாத்தாவுக்கு மெசேஜ் செய்திருக்கிறார். சீக்கிரமே அந்த முதியவருக்கு ஆபாசமான மெசேஞ்களை அனுப்பி, அந்த இரண்டாவது பெண் பணம் கேட்கத் தொடங்கினார்.
அதே ஆண்டு டிசம்பரில், ஷார்வியின் சகோதரி என்று கூறி தினாஸ் என்ற பெண் முதியவரிடம் இருந்து பணம் கேட்டார். ஷார்வி இறந்துவிட்டதாகவும், மருத்துவமனை பில்களை கட்ட பணம் வேண்டும் என முதியவரிடம் தினாஸ் கேட்டுள்ளார். ஆதாரமாக ஷார்வி மற்றும் முதியவருக்கு இடையே நடந்த வாட்ஸ்அப் சாட்களின் ஸ்கிரீன்ஷாட்களையும் அனுப்பியுள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் அந்த பெண்ணுக்கும் பணம் அனுப்பியுள்ளார்.
மிரட்டல்
சில காலம் கழித்து அந்த முதியவர் தனது பணத்தைத் திரும்பக் கேட்டபோது, தினாஸ் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். ஆனால், இத்தோடு இந்த மோசடி முடியவில்லை. சீக்கிரமே ஜாஸ்மின் என்ற பெண் தினாஸின் தோழி என்று கூறி, மெசேஜ் செய்துள்ளார். அவசரம் எனச் சொல்லி உதவி கோரினார். முதியவர் அவருக்கும் பணம் அனுப்பியிருக்கிறார்.
இப்படி ஏப்ரல் 2023 முதல் ஜனவரி 2025 வரை, முதியவர் மொத்தம் 734 முறை பணம் அனுப்பியிருக்கிறார். மொத்தம் ₹8.7 கோடியை அவர் அனுப்பியிருக்கிறார்.. தனது சேமிப்பு அனைத்தையும் இழந்த பிறகும், அவர் தனது மருமகளிடமிருந்து ₹2 லட்சம் கடன் வாங்கி அந்த பெண்ணுக்குப் பணம் அனுப்பியிருக்கிறார். அதன் பிறகும் கூட அவர்கள் பணத்தைக் கேட்டுக் கொண்டே இருந்ததால் தனது மகனிடம் ₹5 லட்சம் கேட்டார்.
போலீசில் புகார்
தனது அப்பா இவ்வளவு பெரிய தொகையைக் கேட்க மாட்டாரே எனச் சந்தேகமடைந்த மகன், தனது தந்தையிடம் விசாரித்துள்ளார். அப்போது தான் என்ன நடந்தது என்பது தெரியவந்தது. தான் ஒரு சைபர் மோசடியில் சிக்கியுள்ளதை உணர்ந்த முதியவர் அதிர்ச்சியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டிமென்ஷியா (மறதி நோய்) இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த ஜூலை 22ம் தேதி இது தொடர்பான சைபர் மோசடி புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் தற்போது இந்த மோசடி குறித்து விசாரித்து வருகின்றனர். நான்கு பெண்களும் ஒரே நபராக இருக்கலாம் என்றும், ஒருவரே இதுபோல வேறு வேறு பெயரைச் சொல்லி முதியவரை ஏமாற்றியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications