25 ஆண்டுகளாக வளர்த்த பாம்பு இப்போது எங்களையே கடிக்கிறது.. பாஜகவை போட்டு தாக்கும் உத்தவ் தாக்ரே
மும்பை: ‛‛25 ஆண்டுகளாக வளர்த்த பாம்பு, இப்போது எங்களை கடிக்கிறது'' என பாஜகவை, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டினார்.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி செய்கின்றன. உத்தவ் தாக்கரே முதல் அமைச்சராக உள்ளார்.
மகாராஷ்டிராவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக, சிவசேனா கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை சந்தித்தது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து அந்த மாநிலத்தில் ஆட்சியையும் பிடித்து இருந்தது.

கூட்டணி மாற்றம்
இந்நிலையில் கடந்த 2019 தேர்தலில் சிவசேனா, பாஜக கூட்டணி முறிந்தது. சிவசேனா கட்சி, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து சிவசேனா, பாஜக இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இருகட்சி தலைவர்களும் ஒருவரையொருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் மத்திய பாஜகவுக்கு எதிராக 3ம் அணி அமைக்க முயற்சிக்கும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவை மும்பைக்கு அழைத்து உத்தவ்தாக்கரே லஞ்ச் கொடுத்தார். அப்போதும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் தெரிவித்தார்.

ஆலோசனை
இந்நிலையில் மகாராஷ்டிராவில் விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக மும்பையில் எம்எல்ஏக்களுடன் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் உடனிருந்தார். ஆலோசனையின்போது ‛‛பட்ஜெட் கூட்டத்தொடரில் 100 சதவீதம் எம்எல்ஏக்கள் இருக்க வேண்டும்'' என உத்தவ் தாக்கரே கூறினார்.

வளர்த்த பாம்பு கடிக்கிறது
மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் கைது செய்யப்பட்டது குறித்தும் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா தலைவர்கள் ஆலோசித்துள்ளனர். அப்போது, பாஜகவை உத்தவ்தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது, ‛‛25 ஆண்டுகளாக நாங்கள் பாலூட்டி வளர்த்த பாம்பு, தற்போது எங்களை கடிக்கிறது. இந்த பாம்பை எப்படி நசுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்'' என கூறியுள்ளார்.

பழிவாங்கும் அரசு
சரத் பவார் பேசுகையில், ‛‛மத்தியில் இத்தகைய பழிவாங்கும் அரசை நான் பார்த்தது இல்லை. நவாப் மாலிக் கைதுக்கு பின்னர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என்னை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டார். அப்போது அவரது கட்சியை சேர்ந்த நால்வரும் மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறினார். மேலும் மத்திய பாஜகவை தோற்கடிக்க நாம் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications