மரங்களை வெட்டி சுற்றுச்சூழலை நாசம் செய்யாதீர்... ஆதித்யா தாக்கரே பொளெர்
மும்பை: சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பாக உலகமே விவாதித்து வரும் நிலையில், மும்பையில் மரங்கள் வெட்டப்பட்டு சுற்றுச்சூழல் நாசம் செய்யப்படுவதாக ஆதித்யா தாக்கரே கவலை தெரிவித்துள்ளார்.
சிவசேனாவின் இளைஞரணி தலைவராக உள்ள ஆதித்யா தாக்கரே மஹாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் வோர்லி தொகுதியில் போட்டியிடுகிறார். சிவசேனாவும், பாஜகவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் நிலையில் பாஜக அரசை விமர்சிக்கும் வகையில் ஆதித்யா தாக்கரே ட்வீட் செய்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மும்பை ஆரே பகுதியில் மெட்ரோ ரயில் திட்ட பணிமனை கட்டப்படுவதற்காக அடர்ந்து வளர்ந்துள்ள ஏராளமான மரங்களை அகற்ற மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு நாட்களாக சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மரங்கள் வெட்டப்படுவதை கண்டித்து காங்கிரஸில் இருந்து அண்மையில் சிவசேனாவில் இணைந்த ப்ரியங்கா சதுர்வேதி போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை மும்பை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் இது தொடர்பான வீடியோவை மேற்கொள் காட்டி ஆதித்யா தாக்கரே ட்வீட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சுற்றுச்சூழலை பாதுகாக்க போராடும் இளைஞர்கள் கைது செய்யப்படுவதாகவும், உலகமே சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து பேசி வரும் தருணத்தில், மும்பை ஆரேவில் ஒரே இரவில் மரங்கள் வெட்டப்பட்டு சுற்றுச்சூழல் நாசம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மராட்டியத்தில் பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், கூட்டணிக் கட்சியை விமர்சிக்கும் தொணியில் அவர் ட்வீட் செய்திருப்பது பாஜகவினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications