ஷிண்டே தரப்பு வேட்பாளருக்கு சென்ற EVM மெஷினின் OTP.. மும்பை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு?
மும்பை: மும்பை வடமேற்கு தொகுதியில் வாக்குப்பதிவின் போது குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், இது தொடர்பாக புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி பெரும்பான்மையான இடங்களை வென்று மத்தியில் மீண்டும் ஆட்சியை அமைத்தது. ஆனால் கடந்த இரண்டு தேர்தல்களை போல இந்த முறை பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜகவுக்கு சறுக்கல் கொடுத்த மாநிலங்களில் முக்கியமானது மகாராஷ்டிரா.

இம்மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றின. இந்நிலையில், மும்பையின் வடமேற்கு தொகுதியில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த தொகுதியில் ஷிண்டே தரப்பு சிவசேனா தரப்பில் ரவீந்தர தத்தாராம் வைக்கரும், உத்தவ் தரப்பு சிவசேனா சார்பில் அமோல் கஜனன் கீர்த்திகர் ஆகியோர் களமிறங்கியிருந்தனர். இந்த தேர்தலில் 48 வாக்குகள் வித்தியாசத்தில் ஷிண்டே தரப்பு வேட்பாளர் வெற்றி பெற்றார்.
ஆனால், அவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடத்தி அதன் மூலம் வெற்றி பெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து அம்மாநில எதிர்க்கட்சி தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. புகாரில்,
"கடந்த ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டன. அப்போது அந்த இடத்தில் தற்போது 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும் ரவீந்திர வைகரின் மைத்துனர் மங்கேஷ் பாண்டில்கர் இருந்திருக்கிறார். தபால் வாக்குகள் பதிவாகியிருந்த பெட்டிகளை திறக்க தேர்தல் அதிகாரியின் மொபைல எண்ணுக்கு ஒடிபி (OTP) அனுப்பப்படும். ஆனால், அவருக்கு பதிலாக பாண்டில்கரின் செல்போனுக்கு ஒடிபி வந்திருக்கிறது" என்று கூறப்பட்டிருக்கிறது.
இந்த புகாரின் அடிப்படையில் பாண்டில்கர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியாக உள்ள உத்தவ் தாக்ரே சிவசேனா தரப்பில் மட்டுமல்லாது வேறு சில கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களிடமிருந்தும் இது தொடர்பாக புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பாண்டில்கரின் செல்போன் பயன்படுத்தப்பட்டது குறித்து தேர்தல் அலுவலரிடமிருந்து வாக்குமூலம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வாக்கு எண்ணிக்கையின் போது காலை முதல் மாலை 4:30 மணி வரை பாண்டில்கர் தனது செல்போனை பயன்படுத்தியிருக்கிறார். இதனை அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். தேர்தல் விதிமுறைகளின்படி, ஒடிபி பெறப்படும் செல்போன் தேர்தல் அதிகாரியிடம் இருக்க வேண்டும். இல்லையெனில், அந்த செல்போன் ஒடிபி பெறப்பட்டவுடன் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். விதி இப்படி இருந்தும் ஏன் பாண்டில்கர் செல்போனை கொடுக்கவில்லை? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்வதேச அளவில் விவாதங்கள் எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications