Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷிண்டே தரப்பு வேட்பாளருக்கு சென்ற EVM மெஷினின் OTP.. மும்பை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு?

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பை வடமேற்கு தொகுதியில் வாக்குப்பதிவின் போது குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், இது தொடர்பாக புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி பெரும்பான்மையான இடங்களை வென்று மத்தியில் மீண்டும் ஆட்சியை அமைத்தது. ஆனால் கடந்த இரண்டு தேர்தல்களை போல இந்த முறை பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜகவுக்கு சறுக்கல் கொடுத்த மாநிலங்களில் முக்கியமானது மகாராஷ்டிரா.

EVM Electronic Voting Machine Mumbai BJP

இம்மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றின. இந்நிலையில், மும்பையின் வடமேற்கு தொகுதியில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த தொகுதியில் ஷிண்டே தரப்பு சிவசேனா தரப்பில் ரவீந்தர தத்தாராம் வைக்கரும், உத்தவ் தரப்பு சிவசேனா சார்பில் அமோல் கஜனன் கீர்த்திகர் ஆகியோர் களமிறங்கியிருந்தனர். இந்த தேர்தலில் 48 வாக்குகள் வித்தியாசத்தில் ஷிண்டே தரப்பு வேட்பாளர் வெற்றி பெற்றார்.

ஆனால், அவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடத்தி அதன் மூலம் வெற்றி பெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து அம்மாநில எதிர்க்கட்சி தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. புகாரில்,

"கடந்த ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டன. அப்போது அந்த இடத்தில் தற்போது 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும் ரவீந்திர வைகரின் மைத்துனர் மங்கேஷ் பாண்டில்கர் இருந்திருக்கிறார். தபால் வாக்குகள் பதிவாகியிருந்த பெட்டிகளை திறக்க தேர்தல் அதிகாரியின் மொபைல எண்ணுக்கு ஒடிபி (OTP) அனுப்பப்படும். ஆனால், அவருக்கு பதிலாக பாண்டில்கரின் செல்போனுக்கு ஒடிபி வந்திருக்கிறது" என்று கூறப்பட்டிருக்கிறது.

இந்த புகாரின் அடிப்படையில் பாண்டில்கர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியாக உள்ள உத்தவ் தாக்ரே சிவசேனா தரப்பில் மட்டுமல்லாது வேறு சில கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களிடமிருந்தும் இது தொடர்பாக புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பாண்டில்கரின் செல்போன் பயன்படுத்தப்பட்டது குறித்து தேர்தல் அலுவலரிடமிருந்து வாக்குமூலம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வாக்கு எண்ணிக்கையின் போது காலை முதல் மாலை 4:30 மணி வரை பாண்டில்கர் தனது செல்போனை பயன்படுத்தியிருக்கிறார். இதனை அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். தேர்தல் விதிமுறைகளின்படி, ஒடிபி பெறப்படும் செல்போன் தேர்தல் அதிகாரியிடம் இருக்க வேண்டும். இல்லையெனில், அந்த செல்போன் ஒடிபி பெறப்பட்டவுடன் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். விதி இப்படி இருந்தும் ஏன் பாண்டில்கர் செல்போனை கொடுக்கவில்லை? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்வதேச அளவில் விவாதங்கள் எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+