பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க ராணுவ தளபதிக்கு தைரியமாக அனுமதி கொடுங்க.. அழிச்சிடுங்க.. சிவசேனா
மும்பை: சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், ராணுவ தளபதிக்கு உத்தரவு கொடுத்து உடனே பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீரின் பகுதிகளை மீட்க வேண்டும் என்றும் அங்குள்ள கும்பல்களை விரட்டி அடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்தியாவின் புதிய ராணுவ தளபதி ஜெனரல் நராவனே, நாடாளுமன்றம் விரும்பினால் பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியை மீட்க இந்திய ராணுவம் தயாராக இருப்பபதாக கூறினார்.
ராணுவ தளபதியின் இந்த கருத்தை வரவேற்று சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

பேசியதில் தவறில்லை
அதில் பிறவியிலேயே மராத்தியரான ராணுவ தளபதி நராவனே அப்படி பேசியதில் எந்த தவறும் இல்லை. பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது. மத்திய அரசு ராணுவத்திற்கு இந்திய மேப்பை வழங்க வேண்டும். அத்துடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க அனுமதி கொடுக்க வேண்டும்.

அழிக்க இதுவே வழி
இது மட்டும் அங்குள்ள தீவிரவாத கும்பல்களை (துக்டா-துக்டா கும்பல்கள்) மொத்தமாக ஒழிக்க ஒரே வழி. ஏனெனில் நிறைய தீவிரவாத பயிற்சி முகாம்கள் பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள பகுதியில் தான் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் ஆதரவுடன் இயக்கி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நராவனேவின் கொள்கை
இந்தியா பலமுறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய போதிலும் பாகிஸ்தான் தனது பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை என்று சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் நமது வீரர்கள் கொல்லப்படுவது குறித்து குறிபிட்டுள்ள சிவசேனா, அரசியல் மற்றும் தேர்தல் நோக்கங்களுக்காக மட்டுமே காஷ்மீர் பிரச்சினை முன்னுக்கு வருகிறது. எனவே தான் ஜெனரல் நராவனேவின் புதிய கொள்கையை நாங்கள் வரவேற்கிறோம்.

இந்தியாவின் பகுதி
ஜெனரல் நராவனேவின் கூற்று, பிப்ரவரி 1994 இல் இந்திய நாடாளுமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது, அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை உட்பட முழு ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி" என்று கூறியிருந்தார். அத்துடன் அதை அரசு உத்தரவிட்டால் மீட்க தயார் என்றும் கூறியிருந்தார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications