பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க ராணுவ தளபதிக்கு தைரியமாக அனுமதி கொடுங்க.. அழிச்சிடுங்க.. சிவசேனா
மும்பை: சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், ராணுவ தளபதிக்கு உத்தரவு கொடுத்து உடனே பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீரின் பகுதிகளை மீட்க வேண்டும் என்றும் அங்குள்ள கும்பல்களை விரட்டி அடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்தியாவின் புதிய ராணுவ தளபதி ஜெனரல் நராவனே, நாடாளுமன்றம் விரும்பினால் பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியை மீட்க இந்திய ராணுவம் தயாராக இருப்பபதாக கூறினார்.
ராணுவ தளபதியின் இந்த கருத்தை வரவேற்று சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

பேசியதில் தவறில்லை
அதில் பிறவியிலேயே மராத்தியரான ராணுவ தளபதி நராவனே அப்படி பேசியதில் எந்த தவறும் இல்லை. பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது. மத்திய அரசு ராணுவத்திற்கு இந்திய மேப்பை வழங்க வேண்டும். அத்துடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க அனுமதி கொடுக்க வேண்டும்.

அழிக்க இதுவே வழி
இது மட்டும் அங்குள்ள தீவிரவாத கும்பல்களை (துக்டா-துக்டா கும்பல்கள்) மொத்தமாக ஒழிக்க ஒரே வழி. ஏனெனில் நிறைய தீவிரவாத பயிற்சி முகாம்கள் பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள பகுதியில் தான் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் ஆதரவுடன் இயக்கி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நராவனேவின் கொள்கை
இந்தியா பலமுறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய போதிலும் பாகிஸ்தான் தனது பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை என்று சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் நமது வீரர்கள் கொல்லப்படுவது குறித்து குறிபிட்டுள்ள சிவசேனா, அரசியல் மற்றும் தேர்தல் நோக்கங்களுக்காக மட்டுமே காஷ்மீர் பிரச்சினை முன்னுக்கு வருகிறது. எனவே தான் ஜெனரல் நராவனேவின் புதிய கொள்கையை நாங்கள் வரவேற்கிறோம்.

இந்தியாவின் பகுதி
ஜெனரல் நராவனேவின் கூற்று, பிப்ரவரி 1994 இல் இந்திய நாடாளுமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது, அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை உட்பட முழு ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி" என்று கூறியிருந்தார். அத்துடன் அதை அரசு உத்தரவிட்டால் மீட்க தயார் என்றும் கூறியிருந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications