முற்றும் மோதல்.. மகாராஷ்டிர அமைச்சர் உறவினர் வழக்கில் என்சிபி எடுத்த அதிரடி நடவடிக்கை.. அடுத்து என்ன
மும்பை: மகாராஷ்டிர அரசுக்கும் என்சிபி அமைப்புக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ள நிலையில், மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக்கின் மருமகன் சமீர் கான் தொடர்பான வழக்கில் என்சிபி எடுத்துள்ள முடிவு மோதலை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக ஷாருக் மகன் ஆர்யன் கான் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழகில் ஆர்யன் கானுக்கு சமீபத்தில் தான் ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் நாளுக்கு நாள் ஒவ்வொரு திருப்பங்கள் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் விசாரணை அதிகாரியாக இருந்த சமீர் வான்கடே பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

சமீர் வான்கடே
போதைப்பொருள் வழக்கில் இருந்து ஆர்யன்கானை விடுவிக்கப் போதை தடுப்பு பிரிவு போலீஸார்(என்.சி.பி) ரூ.25 கோடி பேரம் பேசியதாகவும், அதில் ரூ.8 கோடி மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவுக்கு கொடுக்கப்பட்டதாகவும் பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவர் ஆர்யன் கான் வழக்கில் இருந்து நீக்கப்பட்டு, என்.சி.பி., தலைமையகத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரித்த வந்த 6 கேஸ்களும் என்சிபி உயர் அதிகாரி சஞ்சய் சிங் தலைமையிலான சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர அமைச்சர்
மகாராஷ்டிர சிறுபான்மை துறை அமைச்சர் நவாப் மாலிக்கின் மருமகன் சமீர் கான் தொடர்பான வழக்கும் தற்போது சஞ்சய் சிங் தலைமையிலான சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. நவாப் மாலிக்கின் மருமகன் சமீர் கான் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கு 20 ஆயிரம் அனுப்பியதாக விசாரிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 200 கிலோ போதைப்பொருட்களை வைத்திருந்ததாகக் கூறி அவரை கைது செய்தது என்சிபி. தன்னிடம் இருந்தது மூலிகை புகையிலை என்று கூறி சமீர் கான் ஜாமீன் பெற்றார்.

என்சிபி அதிரடி முடிவு
இந்த வழக்கில் தற்போது முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது சமீர் கானுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என என்சிபி அதிகாரிகள் நீதிமன்றத்தில் முறையிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மகாராஷ்டிர அரசுக்கும் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், என்சிபி-இன் இந்த முடிவு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

அமைச்சர் vs அதிகாரி
கடந்த சில வாரங்களாகவே என்சிபி அதிகாரியான சமீர் வான்கடேவை மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் மிக கடுமையாகத் தாக்கி பேசி வருகிறார். பாலிவுட் பிரபலங்கள் மீது போலியாகப் போதைப்பொருள் வழக்குகளைப் போட்டு அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் வான்கடே ஈடுபடுவதாக அமைச்சர் குற்றஞ்சாட்டினார். மேலும், சமீர் வான்கடேவின் பிறப்பு சான்றிதழை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட அமைச்சர், அவர் போலியான சாதிச் சான்றிதழை அளித்து அரசு வேலையில் சேர்ந்துள்ளதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

வான்கடே விளக்கம்
முன்னதாக சமீர் வான்கடே சகோதரி யாஸ்மின் போதைப் பொருள் வியாபாரி ஒருவரது வாட்ஸ்அப் சாட்களையும் அமைச்சர் வெளியிட்டிருந்தார். இதனிடையே போதைப் பொருள் மாஃபியாக்கள் தன்னையும், தனது குடும்பத்தையும் சூழ்ச்சி வலையில் சிக்க வைப்பதற்கான பணிகளை பின்னிருந்து இயக்கி வருவதாகத் தெரிவித்திருந்தார். மேலும், அமைச்சர் தனது பிறப்பு சான்றிதழை வெளியிட்டது தனது தனியுரிமையை மீறும் வகையில் உள்ளதாகவும் விமர்சித்தார். அதேநேரம் சமீர் வான்கடே மீது தற்போது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications