ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனா எந்த யோசனையை முன்வைத்தாலும் பரிசீலிப்போம்: மூத்த காங். தலைவர் சவாண்
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனா எந்த யோசனையை முன்வைத்தாலும் பரிசீலிப்போம் என்று முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரித்விராஜ் சவாண் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இத்தேர்தலில் பாஜக 105 இடங்களையும் சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றின.

இருகட்சிகளும் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தன. ஆனால் முதல்வர் பதவி, அமைச்சர்களுக்கான துறைகள் ஆகியவை தொடர்பாக இரு கட்சிகளிடையே இழுபறி நீடித்து வருகிறது. இதனால் புதிய அரசு பதவியேற்காமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் பிடிஐ ஊடகத்துக்கு மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான பிரித்விராஜ் சவாண் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
சிவசேனாவிடம் இருந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக எந்த யோசனையும் எங்களுக்கு வரவில்லை. அப்படியான ஒரு யோசனையை சிவசேனா முன்வைத்தால் கட்சி மேலிடத்துக்கு தெரிவித்து பரிசீலிப்போம்
சிவசேனாவின் யோசனை என்பது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இவ்வாறு பிரித்விராஜ் சவாண் கூறியுள்ளார்.
இத்தேர்தலில் காங்கிரஸ் 44, தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களில் வென்றன. 56 இடங்களில் வென்ற சிவசேனாவுடன் காங்கிரஸ்_ தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அரசு அமைக்கலாம் என்கிற யூகங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் 3 கட்சிகளுமே இதனை நிராகரித்து வரும் நிலையில் பிரித்வராஜ் சவாண் இக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications