கலங்கிய ஷாருக்கான்.. ஜெயிலில் மகனுக்கு மணியார்டர் அனுப்பினார்.. அதுவும் ரூ.4500 மட்டுமே..!
மகனுடன் வீடியோ கால் பேசினார் ஷாருக்கான்
மும்பை: கோடிக்கணக்கில் பணம் இருந்தும், சிறையில் உள்ள மகனுக்கு 4500 ரூபாய் மட்டுமே ஷாருக்கான் மணியார்டர் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கப்பலில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்... 2-ம் கட்டமாக இந்த வழக்கில் மேலும் சிலரையும் போலீசார் கைது செய்தனர்.
இதுவரை இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜாமீன் கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆர்யன்கான் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

கோர்ட்
ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை மும்பை நீதிமன்றம் ஏற்கனவே ஒத்திவைத்திருந்த நிலையில், மீண்டும் விசாரணைக்கு வந்தது.. 3வது முறையும் இவரது ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோபர் 20ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

விசாரணை
என்சிபி தரப்பில் இருந்து ஆஜரான வழக்கறிஞர், கப்பலில் சோதனை நடத்திய போது ஆர்யன் கானிடம் இருந்து எந்தபோதை பொருட்களும் கிடைக்கவில்லை என்றாலும், அவர் கடந்த சில வருடங்களாகவே போதை பொருளை சாப்பிட்டு வந்துள்ளார், அதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தனர், ஆனாலும் ஜாமீன் கிடைக்கவில்லை என்றார். இதனிடையே, மகனை எப்படியாவது வெளியே கொண்டு வந்துவிட வேண்டும் என்ற தவிப்புடன் ஷாருக்கான் இருக்கிறார்.. அதற்கான எல்லா பக்கங்களிலும் முயற்சி எடுத்து கொண்டு வருகிறார்..

கைதிகள்
விசாரணை கைதிகள் காவலரின் முன்னிலையில் மாதந்தோறும் 2 அல்லது 3 முறை தங்கள் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞரை தொடர்புகொள்ளும் வசதி இந்த சிறையில் கடந்த ஆண்டுமுதல் கொண்டுவரப்பட்டது. அதன்படி, மும்பை ஆர்த்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யன்கான், கைதாகி 12 நாட்களுக்கு பிறகு முதன்முறையாக தன்னுடைய அப்பா, அம்மாவுடன் வீடியோ காலில் பேசினார்.

கண்காணிப்பு
குடும்பத்துடன் வாரம் 2 நாட்கள் வீடியோ காலில் பேச கோர்ட் அனுமதி தந்துள்ள நிலையில், ஷாருக்கானும் அவரது மனைவி கௌரியும் சிறை அதிகாரிகள் கண்காணிப்பின் கீழ் 10 நிமிடம் வீடியோ கால் பேசினார்கள். வீடியோ காலில் அப்பா, அம்மாவுடன் ஆர்யன்கான் கண்கலங்கி பேசியிருக்கிறார்.. அதேபோல, மகனை பார்த்து ஷாருக்கானும் கண்கலங்கியதாக கூறப்படுகிறது.

கேன்டீன்
இதனிடையே, மகனின் செலவுக்காக ரூபாய் 4500 ஷாருக்கான் மணி ஆர்டர் செய்துள்ளாராம்.. இந்த பணம், சிறையில் இருக்கும் கேன்டீனில் விற்கும் பொருட்களை, அவர் வாங்கி சாப்பிடுவதற்காகவே அனுப்பி வைத்துள்ளாராம்.. கோடி கணக்கில் பணம் இருந்தாலும், கைதியாக இருக்கும் தன்னுடைய மகனுக்கு அதிகப்பட்சமாக ரூ.4,500 மட்டுமே மணியார்டர் அனுப்ப முடியும் என்பதால், அந்த தொகையை ஷாருக்கான் அனுப்பியுள்ளதாக சிறை வட்டாரங்கள் கூறுகின்றன..

மணியார்டர்
இத்தொகைக்கு மேல் அனுப்ப அனுமதி கிடையாது. இத்தகவலை சிறை கண்காணிப்பாளர் நிதின் வேச்சல் தெரிவித்துள்ளார்.. ஆனாலும் ஜெயில் சாப்பாடுகளை ஆர்யன் கான் சாப்பிடுவதில்லையாம்.. ஷாருக்கானின் மனைவி கவுரி கான், வீட்டில் இருந்து காலை டிபனும் அவருக்கு தேவையான பொருட்களையும் சிறைக்கு சில நாட்களுக்கு முன் கொண்டு சென்றார். ஆனால், ஆர்தர் ரோடு சிறை அதிகாரிகள் அதற்கு அனுமதி மறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications