நிற்க வைங்க! இளம் வீரர் கேட்டதும்.. ரோஹித்துக்கு வந்ததே கோபம்! பட்டென முகத்தை திருப்பி! பரபர சம்பவம்
மும்பை: நேற்று இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நடந்து கொண்ட விதம் சர்ச்சையாகி உள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சொதப்பி வருகிறது. ஆசிய கோப்பை 2022 தொடரில் நேற்று இலங்கைக்கு எதிராக நடந்த சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 173-8 ரன்களை 20 ஓவரில் எடுத்தது. அதன்பின் ஆடிய இலங்கை அணி 1 பந்து மீதம் இருக்கும் நிலையில் இலக்கை அடைந்து வெற்றிபெற்றது.

இலங்கை
நேற்று இந்த போட்டியில் ரோஹித் சர்மா மிகவும் கோபமாக காணப்பட்டார். அவர் பொதுவாக கேப்டன்சியில் கூலாகவே இருப்பார். மும்பை அணியின் கேப்டனாக இருந்த சமயங்களில் அவர் இதை போன்ற இக்கட்டான நேரங்களில் ஆடி இருக்கிறார். அப்போதெல்லாம் இதை விட சிறிய ஸ்கோர்களை ரோஹித் சர்மா டிபன்ட் செய்து இருக்கிறார். அப்போதெல்லாம் கடினமான நேரங்களில் கூட ரோஹித் சர்மா நல்ல முடிவுகளை எடுப்பார்.

ரோஹித் சர்மா
ஆனால் இந்திய அணியின் கேப்டன் ஆன பின் ரோஹித் இப்படி இல்லை. அவர் அடிக்கடி கோபம் அடைகிறார். சமீபத்தில் கூட ஒரு தொடரில் புவனேஷ்வர் குமார் கேட்சை விட்டதும் ரோஹித் பந்தை காலால் உதைத்தார். அவரின் செயல் மிக மோசமான ஒன்றாக பார்க்கப்பட்டது. கடந்த பாகிஸ்தான் போட்டியிலும் ரோஹித் சர்மா கோபமாக காணப்பட்டார். இக்கட்டான நேரத்தில் முடிவு எடுக்க முடியாமல் அவர் திணறினார். அதோடு ஓவர் ரொட்டேஷனிலும் அவர் திணறினார்.

அவுட் ஆனார்
நேற்று போட்டியிலும் கூட இதேபோல்தான் ரோஹித் சர்மா கோபமாக காணப்பட்டார். 15 ஓவர்கள் தாண்டியதும் இலங்கை அணி வெற்றி இலக்கை நெருங்கியது. இதனால் ரோஹித் சர்மா என்ன செய்வது என்று தெரியாமல் கோபமாக காணப்பட்டார். அதிலும் கடைசி ஓவரில் அர்ஷிதீப் சிங் பீல்டிங் மாற்றும்படி கேட்டார். ஆனால் ரோஹித் சர்மா கோபமாக அதை மறுத்துவிட்டார். முகத்தை கோபமாக வைத்துக்கொண்டு ரோஹித் சர்மா வெடுக்கென திரும்பினார். இந்த வீடியோ வெளியாகி உள்ளது.

இளம் வீரர்
இணையத்தில் பலர் இதை பகிர்ந்து வருகின்றனர். அர்ஷிதீப் சிங்கிற்கு 23 வயதுதான் ஆகிறது. அவர் மிகவும் இளம் வீரர்.கடைசி ஓவரில் கண்டிப்பாக அவர் டென்ஷனாக இருப்பார். அப்படிப்பட்ட நேரங்களில் ரோஹித் சர்மாதான் அவருக்கு நம்பிக்கை தர வேண்டும். ஆனால் மூத்த வீரர் போல செயல்படாமல்.. ஒரு கேப்டன் போல செயல்படாமல் ரோஹித் சர்மா கோபமாக நடந்து கொண்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications