பற்றி எரிந்த நாக்பூர்.. வன்முறையை தூண்டிய முக்கிய குற்றவாளி கைது.. யார் இந்த ஃபஹீம் கான்? பின்னணி

Subscribe to Oneindia Tamil

மும்பை: அவுரங்கசீப் கல்லறை தொடர்பான சர்ச்சையால் நாக்பூரில் வன்முறை வெடித்தது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் வன்முறையை தூண்டியதாக ஃபஹீம் கான் என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அரசியல் கட்சியை சேர்ந்த இந்த ஃபஹீம் கான் யார்? அவரது பின்னணி என்ன? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக உள்ளார். சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக உள்ளனர். இந்நிலையில் தான் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் திடீரென்று வன்முறை வெடித்தது.

Maharashtra nagpur violence

கடந்த 17 ம் தேதி மாலையில் திடீரென்று நாக்பூரில் வன்முறை வெடித்தது. வெவ்வேறு சமுதாயங்களை சேர்ந்த இருதரப்பினர் மோதிக்கொண்டனர். இந்த மோதல் வன்முறையானது. டயர்களுக்கு தீவைக்கப்பட்டது. உடனடியாக போலீசார் வந்து வன்முறையை அடக்க முயன்றனர். தடியடி நடத்தப்பட்டது.

இதையடுத்து வன்முறை கட்டுக்குள் வந்தது. இந்த வன்முறையில் 38 பேர் வரை காயமடைந்தனர். இதில் 33 பேர் போலீசார் ஆவர். ஒரு போலீஸ்காரர் மீது கேடரியால் தாக்கப்பட்டது. தொடர்ந்து பதற்றம் நிலவியது. இதனால் நாக்பூரில் 10 போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதுபற்றி விசாரணை நடத்தியபோது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது. வன்முறைக்கு முக்கிய காரணம் அவுசரங்கசீப் கல்லறை தொடர்பான விவகாரம் தான் என்று கூறப்பட்டது.

அதாவது மகாராஷ்டிரா மாநிலம் குல்தாபாத்தில் அவுரங்கசீப் கல்லறை இருக்கிறது. நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்த ‛ஷாவா' திரைப்படத்தில் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. அதில் மகாராஷ்டிரா சட்டசபையில் சமாஜ்வாதி கட்சியின் அபு ஆஸ்மி, அவுரங்கசீப்பை நல்லவர் என புகழ்ந்து இருப்பார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜியை கொடூரமாக சித்ரவதை செய்து கொன்ற அவுரங்கசீப்பின் கல்லறை சிவாஜி மண்ணான மகாராஷ்டிராவில் இருக்க கூடாது. அகற்ற வேண்டும் என்று பலரும் கூற தொடங்கினர். போராட்டங்கள் நடந்தன. அவுரங்கசீப் கொடும்பாவி எரிக்கப்பட்டது. குரான் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இதையடுத்து தான் நாக்பூரில் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறை தொடர்பாக இதுவரை மொத்தம் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வன்முறை என்பது ஒரு நபரால் தூண்டப்பட்டதா? இல்லாவிட்டால் குறிப்பிட்ட அமைப்பின் மூலம் தூண்டப்பட்டதா? என்பது பற்றி போலீசார் விசாரணைை தொடங்கி நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக மொத்தம் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1200 பேர் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 200 பேர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. மற்றவர்களை அடையாளம் கண்டு கைது நடவடிக்கையை தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் தான் வன்முறையை தூண்டியதாக ஃபஹீம் கான் என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர் யார் என்றால் மைனாரிட்டி டெமாக்கிரட்டிக் கட்சியை சேர்ந்தவர் ஆவார். நாக்பூரில் வன்முறையை தூண்டி விட்ட புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் நாளை வரை விசாரணை நடத்த காவலில் எடுத்துள்ளனர். இருப்பினும் ஃபஹீம் கான் எந்த வகையில் வன்முறையை தூண்டினார் என்பது பற்றிய விவரத்தை போலீசார் இன்னும் தெரிவிக்கவில்லை. இந்த வன்முறை என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டு சதி வேலையுடன் நடத்தப்பட்டுள்ளது என்று நேற்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் கூறினர். இதையடுது்து இன்று ஃபஹீம் கானை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+