"ஆடை" அணியாவிட்டாலும்.. பெண்கள் அழகாவே இருப்பாங்க.. மேடையிலேயே சொன்ன பாபா ராம்தேவ்
பாபா ராம்தேவ் பெண்கள் குறித்து பேசியது சர்ச்சையாக வெடித்து கிளம்பி உள்ளது
மும்பை: இன்னொரு சர்ச்சை பேச்சு, அதே மகாராஷ்டிர மாநிலத்தில் கிளம்பி உள்ளது.. பாபா ராம்தேவ் பெண்கள் குறித்து பேசியதுதான் இணையத்தில் வைரலாகி கொண்டுமிருக்கிறது.
யோகா குரு பாபா ராம்தேவ் - பாஜக ஆதரவாளர் ஆவார்.. கடந்த காங்கிரஸ் ஆட்சியில், ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி இந்திய அளவில் ஃபேமஸ் ஆனவர்..
கடந்த 2006ம் ஆண்டு பதஞ்சலி என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருபவர்.. உணவு பொருட்கள், மருந்து பொருட்கள், அழகு சாதன பொருட்கள் போன்றவை பதஞ்சலி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, உலக அளவில் மார்க்கெட்டிங் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில், இந்த பதஞ்சலி விற்பனை கூடங்கள் செயல்பட்டும் வருகின்றன.. பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் ஆயுர்வேதம் என்றும் இயற்கையாக தயாரிக்கப்பட்டது என்றும் சொல்லி விளம்பரம் செய்யப்பட்டு வருவதாக சொல்லப்பட்டு வரும்நிலையில், அந்த பொருட்களில் கெமிக்கல்களும் கலந்துள்ளதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்...
அதேபோல, பாபா ராம்தேவ் எது பேசினாலும் அது பரபரப்பாகிவிடும். அந்தவகையில், இப்போதும் ஒரு விஷயத்தை பேசி, பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.. பதஞ்சலி யோகா பீடமும் மும்பை மகிளா பதஞ்சலி யோகா சமிதியும் இணைந்து யோகா அறிவியல் முகாம் மற்றும் மகளிர் கூட்டத்தை தானேயின் ஹைலேண்ட் பகுதியில் ஏற்பாடு செய்திருந்தன.. இந்த கூட்டத்தில் அம்ரிதா ஃபட்னாவிஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது பாபா ராம்தேவ் பெண்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார்... அந்த சமயத்தில், பாபா ராம்தேவ் சொன்ன கருத்துதான், இப்படி பேசுபொருளாக ஆகி உள்ளது. பெண்கள் எதையும் அணியாவிட்டாலும் அழகாகவே இருப்பார்கள் பேசியிருக்கிறார்.. அதுவும் தேவேந்திர ஃபட்னாவிஸ் மனைவி முன்பாகவே இவர் பேசியிருப்பது, மகாராஷ்டிர மாநிலத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. பெண்கள் புடவையில் அழகாக இருக்கிறார்கள்..
அவர்கள் சல்வார் உடையில் அழகாக இருக்கிறார்கள்.. அவர்கள் எதுவும் அணியாவிட்டாலும் என் பார்வையில் அவர்கள் அழகாக இருக்கிறார்கள் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.. ஏற்கனவே, ஏக்நாத் ஷிண்டே குழுவை சேர்ந்த அப்துல் சத்தார், என்சிபியை சேர்ந்த சுப்ரியா சுலேவிடம் பேசிய கேஸ்களே இன்னும் முடியாமல் இருக்கும்போது, அடுத்த சர்ச்சை கிளம்பி உள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications