Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.. உண்மைச் சரிபார்ப்பு குழு விதி செல்லாது..உயர்நீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

மும்பை: 2023ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த தகவல் தொழில்நுட்பத் திருத்த விதிகளை செல்லாது என மும்பை உயர்நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 20) ரத்து செய்துள்ளது. இந்த விதிகளின் படி தான் உண்மை சரிபார்ப்பு குழுவினை மத்திய அரசு அமைத்திருந்தது. இதன் மூலம் உண்மை சரிபார்ப்பு குழுக்களை அமைக்கும் மத்திய அரசின் சட்டத் திருத்தமும் செல்லாது என்பது மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. இந்த திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது' என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி, மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021 இல் திருத்தங்கள் செய்து வெளியிட்டது, இந்த விதிகளின் படி மத்திய அரசை தொடர்புபடுத்தி போலியான தகவல், தவறான தகவல் அல்லது தவறான ஆன்லைன் உள்ளடக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய அரசின் சார்பில் உண்மை சரிபார்ப்பு குழு (ஃபேக் செக் குழு) அமைக்கப்பட்டது.

high court central government

FCU என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் மத்திய அரசின் இந்த உண்மை சரிபார்ப்பு குழு, மத்திய அரசு நிறுவனங்களை பற்றி வரும் போலியான, பொய்யான அல்லது அரசை பற்றி தவறாக வழிநடத்தும் கருத்துக்களை கொண்ட சமூக வலைதள பதிவுகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியும். உண்மை சரிபார்ப்பு குழுவின் உத்தரவின்படி, ஆட்சேபைனக்குரிய எந்த ஒரு சமூக வலைதள பதிவுகளையும் சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனம் நீக்க வேண்டும்.. ஒருவேளை மறுப்பு தெரிவித்தால், சட்ட ரீதியாக நடவடிக்கையை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது.

ஆனால் தவறான ஆன்லைன் செய்திகளைக் கண்டறிவதற்காக உண்மை சரிபார்ப்பு குழுக்களை உருவாக்குவதற்கான அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கும் விதி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்த புதிய விதிகளுக்கு எதிராக பிரபல ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா உள்ளிட்ட பல மனுதாரர்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்தத் திருத்தங்கள் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 79வது பிரிவின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டவை என்றும், அரசியலமைப்பு சட்டப் பிரிவு 14 மற்றும் பிரிவு 19(1)(a)(g)) ஆகியவற்றை மீறுவதாகவும் அவர்கள் வாதிட்டனர்.

இந்த வழக்கை கடந்த 2023ம் ஆண்டு ஜனவரியில் விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கௌதம் படேல் மற்றும் டாக்டர் நீலா கோகாய் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முரண்பட்ட தீர்ப்பு வழங்கியது. இந்த விவகாரம் மூன்றாவது நீதிபதிக்கு வந்தது. நீதிபதி அதுல் சந்துர்கரின் அமர்வு, இந்தத் திருத்தங்கள் இந்திய அரசியலமைப்பின் 14 மற்றும் பிரிவு 19 ஐ மீறுவதாக கருதுவதாகக் கூறி, சட்டத் திருத்தங்கள் செல்லாது என அறிவித்தார். அதாவது தவறான ஆன்லைன் செய்திகளைக் கண்டறிவதற்காக உண்மை சரிபார்ப்பு குழுக்களை உருவாக்குவதற்கான அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கும் விதி செல்லாது என மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி அதுல் சந்துர்கர் தீர்ப்பளித்துள்ளார்.

இது பற்றி தீர்ப்பில் கூறிய நீதிபதி, "இந்த விஷயத்தை நான் மிகவும் விரிவாகப் பரிசீலித்தேன். இந்திய அரசியலமைப்பின் 14 (சமத்துவத்திற்கான உரிமை), 19 (பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம்) மற்றும் 19 (1) (ஜி) (சுதந்திரம் மற்றும் தொழில் உரிமை) ஆகியவற்றை மீறும் வகையில் விதிகள் உள்ளன. இத விதிகளில் உள்ள "போலியான, தவறான மற்றும் தவறாக வழிநடத்தும் தகவல்" என்ற வார்த்தை பதங்கள் என்பது ஒரு வரையறை இல்லாத நிலையில் இருக்கிறது. இந்த விதி தெளிவற்றதாகவும் தவறானதாகவும் உள்ளது" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+