சர்வீஸ் சார்ஜ் வசூலித்த உணவகத்துக்கு ‛ஆப்பு'.. ரூ.50 ஆயிரம் போச்சே.. வாடிக்கையாளர் செய்த சம்பவம்
மும்பை: மும்பையைச் சேர்ந்த 'சைனா கேட் ரெஸ்டாரன்ட் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ. 50,000 அபராதம் விதித்துள்ளது. 'போரா போரோ' உணவகத்தை நடத்தி வரும் இந்த நிறுவனம், வாடிக்கையாளர்களின் பில்களில் கட்டாயமாக சர்வீஸ் சார்ஜ் வசூலித்த நிலையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையை சேர்ந்த ஒருவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பையைச் சேர்ந்த 'சைனா கேட் ரெஸ்டாரன்ட் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்திற்கு சொந்தமான ‛போரா போரா' உணவகத்துக்கு சென்று உணவு சாப்பிட்டார்.

அப்போது அவருக்கு பில் கட்டணமாக ரூ.624 வழங்கப்பட்டது. உணவின் விலை, ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றுடன் சர்வீஸ் சார்ஜ் 10 சதவீதம் வரை சேர்க்கப்பட்டது. உணவகங்களில் சர்வீஸ் சார்ஜ் செய்யக்கூடாது என்று நீதிமன்றங்கள் பலமுறை உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் உணவகத்தில் சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கப்பட்டது.
இதனால் அந்த நபர் சர்வீஸ் சார்ஜை நீக்கும்படி கூறினார். ஆனால் உணவகம் மறுத்துவிட்டது. மேலும் சர்வீஸ் சாரஜ் கட்டணத்தை அவரிடம் இருந்து வசூலித்தது. இதுதொடர்பாக அந்த நபர் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தில் ஒரு புகார் அளித்தார். அதன்மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
விசாரணையின்போது சர்வீஸ் சார்ஜ் விதிக்கப்பட்ட பில் ஆதாரமாக வழங்கப்பட்டது. இதன்மூலம் வாடிக்கையாளர் சொல்வது உண்மை என்றும், அந்த உணவகம் சர்வீஸ் சார்ஜை கட்டாயப்படுத்தி வசூலிப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த உணவகத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.
முன்னதாக, ரெஸ்டாரண்ட்டுகளில் சர்வீஸ் சார்ஜ் வசூலிக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் வழிக்காட்டுதல்களை வழங்கியது. ஆனால் அதனை மீறி சர்வீஸ் சார்ஜை ரெஸ்டாரண்ட் வசூலித்ததாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் ஹோட்டல், ரெஸ்டாரண்ட்டுகளில் சர்வீஸ் சார்ஜ் தனியாக வசூலிக்கும் பட்சத்தில் பொதுமக்கள் அதற்கு எதிராக முறையிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications