மகாராஷ்டிராவில் உச்சம் தொட்ட கொரோனா.. ஒரே நாளில் 23,179 பேருக்கு பாதிப்பு; டெல்லியிலும் அதிகரிப்பு!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த 23,179 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு கொரோனா உச்சம் தொட்டுள்ளது. தலைநகர் டெல்லியிலும் ஜனவரி 1-ம் தேதிக்கு பிறகு முதன்முறையாக 500-க்கு மேற்பட்ட பாதிப்பு பதிவாகி உள்ளது.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்தியாவில் இரண்டாவது அலை ஏற்பட்டு விட்டதா என்ற அளவுக்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.

Corona peaks in Maharashtra, affecting 23,179 people in a single day

குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிமாக உள்ளது.இந்த நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா உச்சம் தொட்டுள்ளது. அங்கு இந்த ஆண்டில் அதிகபட்சமாக ஒரே நாளில் 23,179 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 23,70,507 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 84 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.

சுமார் 1,52,760 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மும்பையில் மட்டும் 2,377 புதிய பாதிப்புகள் பதிவாகி உள்ளன. கொரோனவை கட்டுப்படுத்த மகாராஷ்டிராவின் சில இடங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் தலைநகர் டெல்லியிலும் ஜனவரி 1-ம் தேதிக்கு பிறகு முதன்முறையாக 500-க்கு மேற்பட்ட பாதிப்பு பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுளள்து. 3 பேர் பலியாகி உள்ளனர். 319 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+