மிக மோசம்.. 3 லட்சம் கொரோனா கேஸ்களை தொட்ட மகாராஷ்டிரா.. மும்பையில் மட்டும் 1 லட்சம்!
மும்பை: மகாராஷ்டிராவில் மொத்த கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை தற்போது 3 லட்சத்தை கடந்து இருக்கிறது.
Recommended Video
மகாராஷ்டிராவில் தொடர்ந்து கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா மாறியுள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 8348 கொரோனா கேஸ்கள் வந்துள்ளது. மகாராஷ்டிராவில் மொத்த கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை தற்போது 3 லட்சத்தை கடந்து இருக்கிறது. அங்கு மொத்தமாக 300937 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மகாராஷ்டிராவில் தற்போது ஆக்டிவ் கேஸ்களில் எண்ணிக்கை 123377 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5306 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் . அங்கு மொத்தமாக 165663 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 144 பேர் பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 11596 பேர் பலியாகி உள்ளனர்.
மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 1186 கொரோனா கேஸ்கள் வந்துள்ளது. மும்பையில் மொத்த கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை தற்போது 1 லட்சத்தை கடந்து இருக்கிறது. அங்கு மொத்தமாக 100350 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மும்பையில் தற்போது ஆக்டிவ் கேஸ்களில் எண்ணிக்கை 23917 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1152 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் . அங்கு மொத்தமாக 70492 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் 65 பேர் பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 5650 பேர் பலியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications