மின்னல் வேகத்தில் பறந்த சைரஸ் மிஸ்திரி கார்.. இத்தனை விதிமீறல்களா? ஐவிட்னஸ் சொல்வது என்ன?
மும்பை: டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரி பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
"ஷபூர்ஜி பலோன்ஜி குழுமம்" எனப்படும் மிகப் பெரிய கட்டுமான நிறுவனத்தின் தலைவரான பலோன்ஜியின் மகன்தான் சைரஸ் மிஸ்திரி. டாடா சன்ஸ் நிறுவனத்தில் அதிக அளவு பங்குகளை இந்த கட்டுமான நிறுவனம் வைத்துள்ளது.
டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக இருந்த ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாக அப்பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து அந்த பதவிக்கு சைரஸ் மிஸ்திரி நியமிக்கப்பட்டார். ஆனால் மிஸ்திரி 4 ஆண்டுகளிலேயே பதவியிலிருந்து விலகினார்.

குஜராத்
இந்த நிலையில் குஜராத்தின் ஆமதாப்பாத்தில் இருந்து மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பைக்கு தனது காரில் மிஸ்திரி பயணம் செய்தார். அப்போது மும்பைக்கு அருகே பால்கர் மாவட்டத்தில் சூர்யா நதியின் மீதுள்ள பாலத்தில் கார் சென்ற போது சாலைத் தடுப்பில் மோதி அந்தக் கார் விபத்துக்குள்ளானது.

சைரஸ் மிஸ்திரி
இதில சைரஸ் மிஸ்திரி, அவருடன் பயணித்த ஜஹாங்கிர் பன்டோல் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்து நடந்தது குறித்து முதற்கட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மிஸ்திரியும் பன்டோலும் சீட் பெல்ட் அணியவில்லை.

அதிவேகம்
மேலும் காரும் அதி வேகத்தில் பயணித்ததாக சொல்லப்படுகிறது. பால்கரில் உள்ள சரோட்டி செக் போஸ்டை கடந்த பிறகு வெறும் 9 நிமிடங்களில் 20 கி.மீ. தூரத்தை கார் கடந்துள்ளது என்றால் எத்தனை வேகத்தில் கார் சென்றிருக்கக் கூடும். அந்த செக் போஸ்ட் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆராய்ந்தனர்.

9 நிமிடம்
அதிலும் கார் மிக வேகமாக பயணித்து 9 நிமிடங்களில் 20 கி.மீ தூரத்தை கடந்தது தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் சைரஸுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. ஜஹாங்கிருக்கு இடது காலில் எலும்பு முறிவும் தலையில் காயமும் ஏற்பட்டது. இந்த விபத்திற்கு காரணம் அதிவேகம்தான் என விபத்தை கண்ணால் பார்த்தவர்கள் சாட்சி கூறியுள்ளார்கள். பின் சீட்டில் இருப்பவர்களும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது மோட்டார் வாகன சட்டமாகும்.












Click it and Unblock the Notifications